Friday 23 November 2018

புனித கொலும்பானுஸ்


 
இறைஞானத்தின் மனிதராக, இரவும் பகலும் இடைவிடாமல் இறைவனை போற்றிப் புகழ்ந்தவர். மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். அரண்மணையில் வாழ வாய்ப்பு கிடைத்தபோது ஏழ்மையை விரும்பி குடிசையில் வாந்தவரே புனித கொலம்பானுஸ். இவர் அயர்லாந்தில் நோபர் என்னும் இடத்தில் 540ஆம் ஆண்டு பிறந்தார்.  கொலம்பானுஸ் என்றால். “வெள்ளைப் புறா என்பது பொருள்”. 


  பெற்றோரின் வழி காட்டுதலால் நாளும் நற்பண்புகளில் சிறந்து விளங்கினார். ஏழையாகப் பிறந்த கிறிஸ்துவுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்தார். தனக்கென்று திட்டம் வகுக்காமல் இறைவிருப்பத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்தார். குலுவானிஸ் துறவு மடத்தின் தலைவர் சிநெல் என்பவரின் வழிகாட்டுதலில் துறவு வாழ்வை மேற்கொண்டார். எளிய வாழ்க்கை வழியாக இறைவனோடு இணைந்து இறையனுபவத்தில் ஆனந்தம் அடைந்தார். இறைவனுக்காக இவ்வுலக வாழ்வை கையளிப்பதில் பேரானந்தம் அடைந்தார். இறைவனின் தூண்டுதலால் திருப்பாடல் நூலிற்கு விளக்கம் எழுதினார். பல இடங்களில் துறவு இல்லங்களை நிறுவினார். மக்களுக்கு இடைவிடாமல் ஒப்புரவு வழங்கினார். சக துறவிகளுக்கு தவ முயற்சிகள் செய்யவும், துறவு இல்லத்தின் ஒழுங்குமுறைகளை கடைப்படிக்கவும் முன்மாதிரியாக வாழ்ந்து வழி காட்டினார்.


    எண்ணற்ற மக்கள் இறையமைதி பெற்றுக்கொள்ள வழிகாட்டினார். பாவத்திற்கு பரிகாரம் செய்ய மக்களைத் தூண்டினார். பாவத்தின்மீது வெறுப்பு ஏற்படும் அளவுக்கு தவமுயற்சிகளை மேற்கொண்டார். இறுதியாக நியூஸ்திரியா பகுதியில் நற்செய்தி பணியாற்றினார். புதுமைகள் பல செய்தார். நோயுற்றோரை நலமாக்கினார். சமூகத்தில் நிலவி தவறுகளை கண்டித்தார். இறுதிவரை இறைவழியில் நடந்த கொலம்பானுஸ் 615ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் மண்ணக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து விண்ணக வாழ்வில் நுழைந்தார்.

      

No comments:

Post a Comment