Tuesday 13 November 2018

மரியாவின் நாமம் மீட்பின் தைலம்

 
   புனித பொனவெந்தூர்
 நமது நம்பிக்கையை கூர்மைப்படுத்தும் வகையில் இவ்வாறு கூறுகிறார். “மீட்பர் இயேசு கிறிஸ்து எனது அக்கிரமங்களினிமித்தம் என்னைப் புறக்கணித்துவிட்டால், நான் இரக்கம் மிகுந்த மரியாவின் பாதங்களில் சரணடைந்துவிடுவேன். எனக்கு இறைமன்னிப்பை மரியா பெற்றுத் தரும்வரை அதே நிலையில் வீழ்ந்துகிடப்பேன்”  என்கிறார். பெரிய பெரிய புனிதர்கள் உருவாக்கும் பணி உலகின் இறுதிவரை மரியன்னைக்கு முற்றிலும் உரித்தானது. ஒவ்வொரு புனிதர்களும் அன்னை துணையோடு தூய்மையான வாழ்க்கை வாழ்ந்து புனிதர்களாக மாறினார்கள். செபமாலை செபிக்கின்றவர்களிடம் அலகை நெருங்காது. புனித ஜான்போஸ்கோ, “நான் மரியாவைப் பார்க்காமல்கூட இருந்துவிடுவேன். ஆனால் செபமாலை சொல்லாமல் இருக்கமாட்டேன்”  என்று கூறியுள்ளார். புனித அம்புரோஸ், “மரியின் இனிய நாமம் எனது உள்ளத்தின் ஆழத்தில் மீட்பின் தைலமாக இறங்கட்டும்”  என்று செபித்தார்.

No comments:

Post a Comment