Friday 16 November 2018

அன்னை மரியா துயர் துடைப்பவர்


தெரசா சிறுவயதில் அனைவரையும்  அளவில்லாமல் அன்பு செய்தார். படிக்கட்டுகளில் இறங்கும் போதும் ஒவ்வொரு படியிலும் நின்று கொண்டு, அம்மா என்று அழைப்பார்.  தாயோ, என் அன்பு குட்டி மகளே என்று பதில் கொடுக்காவிட்டால் அடுத்தப் படியில் இறங்கமாட்டார். ஒரு முறை குழந்தை தெரசா தன் அம்மாவை நோக்கி “அம்மா நான் விண்ணகம் செல்வேனா?” என்று கேட்டார். அதற்கு அவரது தாய் “நீ கீழ்ப்படிதலுள்ள நல்ல பிள்ளையாக இருந்தால் விண்ணகத்திற்குப் போவாய்” என்றார். அதற்கு தெரசா அப்படியானால் “அம்மா நான் நல்ல பிள்ளையில்லையானால் நரகத்திற்கு தான் போவேனா? அப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். மோட்சத்திற்கு உங்களை நோக்கிபறந்து வருவேன். நீங்களும் என்னை இறுகக்கட்டியணைத்துக் கொள்வீர்கள்”என்றார். 

        குழந்தை தெரசா தன் தாயிடம் மிகுந்த அன்பும், நம்பிக்கையும் வைத்திருந்தார். தெரசாவின் குழந்தைப்பருவத்தில் தாய் இறந்துவிட்டார். அதனால் தெரசா அதிக வருத்தம் அடைந்தார்.தெரசாவின் அன்னை இறந்த பின் அக்கா அவரைக் கண்காணித்துக் கொண்டிருந்தார். தெரசா நோயுற்ற தருணத்தில் அம்மா! அம்மா! என்று தொடர்ந்து அழைத்துக் கொண்டேயிருந்தார். தோட்டத்திலிருந்த மரியன்னையின் திருசொரூபத்தை நோக்கித் திரும்பினார். இவ்வுலகில் எந்த உதவியும் பெற இயலாத எளிய தெரசா, அன்னை மரியாவிடம் சரண் அடைந்தார். தன்மீது இரக்கம் காட்டும்படி முழுஇதயத்தோடு மன்றாடினார். உடனடியாக அருள் நிறைந்த அன்னை மரியா அவருக்குக் காட்சி கொடுத்தார். அவரது அன்பையும், அருளையும் வெளிக் கொணர்ந்து புன்னகைத்தார். தெரசா அனுபவித்த வேதனைகள்அன்னையின் அருளால் மாறி எண்ணில்லா ஆனந்தம் அடைந்தார். அந்நேரம் முதல் இன்ப துன்பங்களில் அன்னை மரியின் அரவணைப்பை நாடினார். 1884ஆம் ஆண்டு மே திங்கள் 8ஆம் நாள் முதல் முறையாக நற்கருணை பெற்றார். அந்நாளை இயேசுவின் முதல் முத்தம் பெற்ற நாள் என்று கூறுகிறார். தொடர்ந்து இயேசுவின் முத்தம் பெற ஆசைப்பட்டு பெளலீன் அக்காவைப்போல கார்மெல் மடத்தில் சேர விழைந்தார்.

No comments:

Post a Comment