Thursday 22 November 2018

புனித செசிலியா

       
கிறிஸ்துவின் வீரர்களே! எழுவீர் இரவுக்கு உரிய செயல்களை விட்டுவிடுங்கள். ஒளியின் போராயுதத்தை அணிந்து கொள்ளுங்கள் என்று வீரமுழக்கம் செய்து இறுதிவரை இறைவனுக்காக வாழ்ந்தவரே 
புனித செசிலியா. இவர் உரோமை நகரில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் 2ஆம் நூற்றாண்டில் பிறந்தவர். சிறுவயது முதல் இறையன்பில் தன்னைக் கரைத்துக்கொண்டார். நாளும் செபம் செய்வதில் ஆனந்தம் அடைந்தார். வாழ்நாள் முழுவதும் இறைவனின் திருவுளப்படி வாழ இறைவனுக்குத் தன்னை அர்ப்பணம் செய்தார்.


          செசிலியா நற்பண்பிலும், தூய்மையிலும் சிறந்து விளங்கினார். இறைவனை மாட்சிமைப் படுத்துவதை இலட்சியமாகக் கொண்டார். தனது கன்னிமையை இறைவனுக்கு அர்ப்பணித்தார். இசைக்கருவிகளை ஆர்வத்தோடு இசைத்தார். இசைகளின் வாயிலாக இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார். வாழ்வு தருகின்ற,  நலமளிக்கின்ற, ஞானத்தைத் தரக்கூடிய விவிலியத்தை எங்கு சென்றாலும் தம் கரங்களில் ஏந்திச் சென்றார். 

           தனது கன்னிமையை இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ்ந்த செசிலியாவுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர், இயேசு கிறிஸ்துவைத் அறியாத வலேரியன் என்பவரைத் தேர்ந்தெடுத்து இறையன்பு, அறிவு, அழகு, தூய்மை நிறைந்த செசிலியாவை வலேரியன் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள்.திருமண விழாவில் இசைக்கருவிகள் இசைத்து தனது பாடல் வழியாக தனது கன்னிமை இறைவனுக்கு மட்டுமே சொந்தம் என்று பாடினார். வலேரியன் திருமுழுக்கு பெற்றுக்கொள்ள விரும்பினார். பின் அர்பன் என்னும் திருத்தந்தையிடம் சென்று திருமுழுக்கு பெற்றுகொண்டார்.
          

        வேத விரோதிகளின் ஆதிக்கம் அதிகரித்தது. ஆங்காங்கே கிறிஸ்தவர்கள் காரணமின்றி துன்புறுத்தப்பட்டு, உடமைகள் சேதப்படுத்தப்பட்டன. செசிலியாவைக் கைது செய்து தெர்த்துல்லியனிடம் ஒப்படைத்தார். செசிலியாவிடம் இயேசுவின் பெயரை அறிக்கையிடக்கூடாது; கிறிஸ்து இயேசுவை மறுதலிக்க வேண்டும்; உரோமை கடவுளுக்கு பலிசெலுத்தவும் உத்தரவிட்டான். செசிலியா, “நான் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி” என்பதை நீ தெரிந்துகொள் என்று துணிவுடன் கூறினார். இதைக்கேட்ட தெர்த்துல்லியன் கோபங்கொண்டு செசிலியாவின் தலையை வெட்டிக் கொலை செய்தான்.

No comments:

Post a Comment