Sunday 8 April 2018

புனித ஜøலி பில்லியார்ட்

      ஆண்டவரை ஒளியாக வழியாக அன்பாக அருளாக கண்முன் வைத்து வாழ்ந்தவர். ஆசியர் பணியின் மீது தணியாத தாகம் கொண்டவர். ஆன்மீக வாழ்க்கையின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். திருச்சபையின் விசுவாசக் கோட்பாடுகளை முறையாக பின்பற்றி இறைநம்பிக்கையில் வளர்ந்து வந்தார். ஆலயம் சென்று திருப்பலியில் பங்கு கொண்டார். நற்கருணையின் மீது அதிக பக்தியும் பற்றும் கொண்டு வாழ்ந்தவரே புனித ஜøலி பில்லியார்ட். இவர் பிரான்ஸ் நாட்டில் குவில்லி என்ற இடத்தில் 1751ஆம் ஆண்டு பிறந்தார்.

       ஜøலி குழந்தைப்பருவம் முதல் இறைபக்தியில் வளர்ந்து வந்தார். ஆசிரியர் பணியை விரும்பினார். பெற்றோரின் வழிகாட்டுதலால் இறைபக்தியில் வளர்ந்து நற்பண்பில் சிறந்து விளங்கினார். புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆர்வமுடன் கற்றார். ஜøலியாவின் தந்தையிடம் பகை கொண்டவர் அவரின் தந்தையை சுட்டபோது ஜøலி மீது பட்டன. குண்டிப்பட்ட ஜøலி 30ஆண்டுகள் துன்புற்றார். துன்பங்களின்போது இறைவனே தஞ்சம் என்று வாழ்ந்தார். தனது துன்பங்களை ஆன்மாக்களின் மீட்புக்காக ஒப்புக்கொடுத்தார்.
      ஜøலிக்கு உயிர்த்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து துறவுகளுடன் காட்சி தந்தார். காட்சியின் வழியாக குணமடைந்தார். கிறிஸ்துவுக்காக வாழ்வை அர்ப்பணம் செய்து அவரது இறையாட்சி பணி செய்ய விரும்பினார். தனது தோழியுட் இணைந்து 1803ஆம் ஆண்டு புதிய சபையை தோற்றுவித்தார். ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக கல்வி கற்பித்தார். சமூகத்தில் கல்விப்பணி வழியாக கிறிஸ்துவின் வாழ்வுதரும் வார்த்தைகளை அறிவித்தார். துறவு வாழ்க்கையின் விதிகளை முறையாக பின்பற்றினார். அனாதைகள் ஏழை எளிய மக்களின் அன்னையாக பணியாற்றிய ஜøலி 1816ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment