Monday 2 April 2018

புனித க்யூ


       
         சிறுவயது முதல் கிறிஸ்துவின் அன்பினை சுவைத்து வாழ்ந்தவர். நற்பண்பில் சிறந்து விளங்கியவர். கடவுளின் அன்பை இரக்கத்தை தனது அன்பு பணிகள் வழியாக வெளிப்படுத்தியவர்.
தூயவராக வாழ்ந்து உத்தம துறவியாக இறையாட்சி பணி செய்தவர். “தனது மகிழ்ச்சியைவிட கடவுளை மகிழ்ச்சிப்படுத்துவதே சாலச் சிறந்தது” என்ற கொள்கையுடன் வாழ்ந்தவரே புனித க்யூ. இவர் பிரான்ஸ் நாட்டில் டஃபின் என்னும் இடத்தில் 1053ஆம் ஆண்டு பிறந்தார்.

     கிறிஸ்துவின் வழித்தடங்களில் வாழ்ந்த அவருடைய பெற்றோர் கிறிஸ்துவின் அன்பில் இறைபக்தியில் வளர வழிகாட்டியபோது, பொற்றோருக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தார். க்யூ சிறுவயது முதல் கடவுளுக்கு தன்னை அர்ப்பணம் செய்து துறவு வாழ்க்கை வாழ விரும்பினார். துறவு வாழ்க்கைக்கு தேவையான நற்பண்பில் சிறந்து விளங்கினார். இறைபிரசன்னத்தில் இடைவிடாமல் வாழ்ந்து வந்தார். சில ஆண்டுகளுக்கு பின் கிறிஸ்துவின் இறையாட்சி பணி செய்ய விரும்பி வலன்ஸ் பேராலயத்தில் குருவாக அருட்பொழிவு பெற்று இறையாட்சி பணியை சிறப்பாக செய்தார்.

    கடவுளின் இரக்கத்தையும் அன்பையையும் தமது நற்செயல்கள் வழியாக வெளிப்படுத்தினார். கிறிஸ்துவின் வாழ்வுதரும் வார்த்தைகளை அறிவித்தார். எண்ணற்ற மக்கள் கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்டனர்.  க்ரேனோபிள் மறைமாவட்டத்தின் ஆயராக அருள்பொழிவு பெற்று இறைவனை மாட்சிமைப் படுத்தினார். க்யூ புனித புருனோவை தனது ஆன்மீக வழிகாட்டியாக தேர்ந்தெடுத்து தூயவராக வாழ்ந்த க்யூ 1132ஆம் ஆண்டு இறந்தார்.

No comments:

Post a Comment