Friday 27 April 2018

ஏப்ரல் 26. புனித அனாக்ளீட்டஸ்

       கிறிஸ்துவின்மீது அன்பு கொண்டு வாழ்ந்தவர். திருச்சபையின் வளர்ச்சிக்காக தனது வாழ்வை கையளித்தவர். கிறிஸ்துவின் வழிதடங்களில் நடந்து மறைசாட்சியாக மாறியவரே புனித அனாக்ளீட்டஸ். இவர் இத்தாலி நாட்டில் பிறந்தவர். புனித பேதுருவின் மறைவுக்குப் பின் திருச்சபையை வழிநடத்தியவர். புனித பேதுருவின் போதனையால் கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்டு இறைவார்த்தையை வாழ்வாக்கி கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்டார். “என் ஆடுகளை மேய் என்று இயேசு பொறுப்பு கொடுத்தவரும், முதல் திருத்தந்தையுமான பேதுருவின் போதனையால் மனம் மாறியவர் மற்றும் அவர் கையாலே திருத்தொண்டராகவும், குருவாகவும் அருள்பொழிவு பெற்றவர் அனாக்ளீட்டஸ்” என்று புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார் கூறினார். கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்ட காரணத்தால் பேரரசர் நீரோவின் துன்புறுத்தலுக்கு உள்ளாகி 88ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

No comments:

Post a Comment