Friday 27 April 2018

ஏப்ரல் 24. புனித ஃபிதேலிஸ்

    இயேசு கிறிஸ்துவின் மனநிலையை பெற்றுக்கொள்ள ஆர்வமுடன் நற்கருணையின் முன்பாக கண் விழித்து செபித்தவர். தனது நற்பண்புகள் வழியாக சமூகத்தில் நன்மதிப்பு பெற்று ஆசிரியர் பணியின் வழியாக இறையாட்சி பணி செய்தவர். தனது செல்வத்தை ஏழை மக்களுக்கு பகிர்ந்தளித்தார். ஏழைகளின் நண்பராக, உதவியாளராக வாழ்ந்தவர். இறைவனின் அன்பிற்கு சான்றாக நக்பிக்கைக்குரியவராக வாழ்ந்தவரே புனித ஃபிதேலிஸ். இவர் 1577ஆம் ஆண்டு ஜெர்மனியில் சிக்மரிங்கன் என்ற இடத்தில் பிறந்தார்.


          இறைபக்தியில் சிறந்து விளங்கிய ஃபிதேலிஸ்மெய்யியல் பயின்று பேராசிரியராக பணியாற்றினார். சட்டம் பயின்று முனைவர் பட்டம் பெற்று ஏழை எளிய மக்களின் வழக்குரைஞராக பணியாற்றி மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றார். வாய்ப்பு கிடைத்த தருணங்களில் திரும்பலியில் கலந்து கொண்டார். நற்கருணை ஆண்டவரால் ஆட்கொள்ளப்பட அவர் முன்பாக மண்டியிட்டு செபித்தார். தனது உடமைகளை விற்று ஏழைகளுக்கு கொடுத்தார். நேர்மையாக பணியாற்ற வழக்குரைஞர் பணி தடையாக இருப்பதை உணர்ந்து வழக்குரைஞர் பணியை துறந்து ஃபிதேலிஸ் கப்புச்சியன் துறவு சபையில் சேர்ந்தார்.


       ஃபிதேலிஸ் துறவு வாழ்வின் பயிற்சிகள் பெற்று 1612 குருத்துவ அருள்பொழிவு பெற்றார். மறையுரைகள் வழியாக இறைவனின் அன்பையையும் இறைவார்த்தையையும் எடுத்துரைத்தார். ஒப்புரவு வழங்க தனது நேரத்தை செலவிட்டார். கால்வின் தப்பறைகளுக்கு எதிராக குரல்கொடுத்தார். பிறர் தன்னை குற்றப்படுத்திய தருணங்களில் அமைதியாக இருந்தார். ஆர்வமுடன் தனது உயிர்மூச்சாக நினைத்து நற்கருணை ஆண்டவரை ஆராதித்த ஃபிதேலிஸ் 1622ஆம் ஆண்டு கால்வினின் ஆதரவாளர்களால் கொலை செய்யப்பட்டார். 

No comments:

Post a Comment