Wednesday 4 April 2018

புனித இசிதோர்


 இறைவனால் அழைக்கப்பட்டு வழிநடத்தப்பட்டவர். துறவிகள் குருக்கள் மீது அளவற்ற அன்பும் மதிப்பும் கொண்டவர். எண்ணற்ற மக்களுக்கு ஆன்மீக தந்தையாக இருந்து வழிகாட்டியவர். உலக இன்பங்களில் மூழ்கி இறைவனை மறந்து வாழ்ந்த மக்களின் தவறுகளை எடுத்துரைத்தவர். இறைவனை தியானம் செய்து இறைபிரசன்னத்தின் வழியாக இறைவனை மாட்சி படுத்தியவரே புனித இசிதோர். இவர் 560ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் பிறந்தார்.


இறைவேண்டுதல் செய்து ஞானமும் அறிவும் பெற்றார். இலத்தின், கிரேக்கம் போன்ற மொழிகளை பேசவும் எழுதவும் கற்றுக்கொண்டார். இறைபக்தி மிகுந்த இசிதோர் அன்னை மரியாவிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அன்னையின் துணையை ஒவ்வொரு நிமிடமும் நாடினார். இறையாட்சி பணிக்காக இறைவன் தன்னை அழைப்பதாக உணர்ந்து இறைவனுக்கு தன்னை அர்ப்பணம் செய்தார். குருத்துவ பயிற்சி பெற்று குருவாக அருள்பொழிவு பெற்று சிறந்த முறையில் இறையாட்சி பணி செய்தார்.



     இசிதோர் குருக்கள், துறவிகள் மீது அன்பும் மதிப்பும் கொண்டிருந்தார். ஏழை எளிய மக்களின் நலன்மீது மிகுந்த அக்கறை செலுத்தி அவர்களுக்கு உதவிகள் செய்தார். செவிலே நகரின் ஆயராக அருள்பொழிவு பெற்றார். மக்கள் ஆன்மீக வாழ்வில் அக்கறையற்று வாழ்ந்தபோது அவர்களுக்கு நல் வழிகாட்டினார். தாய்நாட்டின் கலாச்சாரங்களை மறந்து மக்கள் வாழ்ந்தபோது அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி இறைவனை இனம் காட்டினார். இறைமக்களுக்காக வாழ்ந்து இறையாட்சி பணி செய்த இசிதோர் 636ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment