Sunday 15 April 2018

புனித பெனடிக்ட் ஜோசப் லாப்ரே

     
     இறைவனின் அழைப்பை உணர்ந்து இறையாட்சி பணிக்காக தன்னை அர்ப்பணம் செய்தவர். தனது கரங்களில் செபமாலை, விவிலியம் எப்பெழாதும் வைத்திருந்தார். ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதில் கருத்தாய் இருந்தவர். இறையாட்சி பணி செய்ய தடையாக இருந்தவற்றை செபத்தின் வழியாக வெற்றியின் படிகளாக மாற்றியவரே புனித பெனடிக்ட் ஜோசப் லாப்ரே. இவர் பிரான்ஸ் நாட்டில் பொலோன் மறைமாவட்டத்தில் அமெட்டஸ் என்னுமிடத்தில் 1748ஆம் ஆண்டு பிறந்தார்.


          பெனடிக்ட் ஜோசப் லாப்ரே சிறுவயது முதல் தனது சித்தப்பாவின் வீட்டில் தங்கி கல்வி கற்றார். சிறந்த முறையில் கல்வி கற்றார். சிறுவயது முதல் செபிப்பதில் ஆர்வம் காட்டினார். இறைவனுக்காக பணி செய்ய இறைவன் தன்னை அழைப்பதாக உணர்ந்தார். தனது சித்தப்பாவின் வழிகாட்டுதலால் லா ட்ராப்பே என்ற இடத்திலுள்ள சிஸ்டர்சியன் துறவு இல்லத்தில் சேர்ந்து குருவாக இறையாட்சி பணி செய்ய சென்றார். தமது தாழ்ச்சியின் வழியாக இறைவனை மாட்சிப்படுத்தினார்.


     பெனடிக்ட் ஜோசப் லாப்ரே தாழ்ச்சியின் வழிகளில் நடந்து இறைவனுக்கு உகந்த முறையில் இறையாட்சி பணி செய்தார் இரக்கம் நிறைந்த பணிகள் செய்தார். அன்பு, அமைதி, பொறுமை போன்ற புண்ணியங்களில் வளர்ந்து அனைவரின் அன்பிற்கு தகுதியானார். கடும்தவ முயற்சிகள் மேற்கொண்டு தியாகச் செயல்கள் வழியாக இறைவனை மாட்சிப்படுத்தினார். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டு வாழ்ந்தார். இறைவனோடு வேண்டுதல் செய்த தருணத்தில் இறைவனின் குரல் கேட்டார். உலக இன்பங்களை துறந்து கடும்தவ வாழ்வை மேற்கொண்டார். எங்கு சென்றாலும் தனது கரங்களில் விவிலியம், செபமாலை எடுத்து சென்றார். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்த பெனடிக்ட் ஜோசப் லாப்ரே 1783ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment