Friday 20 April 2018

ஏப்ரல் 18. புனித கால்டினுஸ்

          செல்வாக்கு மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர். உலக இன்பங்களையும் செல்வங்களையும் இறைவன்மீது கொண்ட அன்பினால் துறந்தவர். கல்வி அறிவில் சிறந்து விளங்கினார். தூய்மையான வாழ்வை விரும்பினார். தன்னால் இயன்றவரை பிறருக்கு உதவியாக வாழ்ந்தவரே புனித கால்டினுஸ். இவர் இத்தாலி நாட்டில் மிலான் நகரில் 1100ஆம் ஆண்டு செல்வந்த கடும்பத்தில் பிறந்தார். கால்டினுஸ் செல்வந்த குடும்பத்தில் பிறந்தாலும் ஏழ்மையை பின்பற்றினார். அன்பும் அமைதியும் மிகுந்த குடும்பத்தில் வாழ்ந்தார். கல்வி கற்று இறைஞானம் மிகுந்தவராக வளர்ந்தார். 


     கால்டினுஸ் இறைவனுக்கு தன்னை அர்ப்பணிக்க திருவுளம் கொண்டார். தனது வாழ்வை இறைவனுக்காக இறையாட்சி பணி செய்ய திருத்தொண்டராக அருள்பொழிவு பெற்றார். சிறந்த முறையில் இறைவார்த்தையை மறையுரை வழியாக எடுத்துரைத்தார். துன்பங்கள் சவால்கள் மிகுந்த காலத்தில் வாழ்ந்த கால்டினுஸ் 1165ஆம் ஆண்டு உரோமையில் உள்ள சாந்த சபினா பேராலயத்தின் பங்கு தந்தையாக திருந்தந்தையால் நியமணம் பெற்று இறைமக்களை இறைவல்லமையால் வழிநடத்தினார். இறைவனுக்காக இறையாட்சி பணி செய்த கால்டினுஸ் 1176ஆம் ஆண்டு இறந்தார்.  

No comments:

Post a Comment