Friday 13 April 2018

ஏப்ரல் 9 புனித வால்டேட்ரூடிஸ்

         
    இறைவனுக்கு தன்னை அர்ப்பணம் செய்து புண்ணிய வாழ்க்கை வாழ்ந்தவர். அழகும் அறிவும் அர்ப்பணிப்பும் மிகுந்தவர். கனிவும், தூய்மையும், புண்ணியமும், நற்பண்புகளும் நிறைந்தவர். ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வாழ்ந்தவரே புனித வால்டேட்ரூடிஸ். இவர் ஏழாம் நூற்றாண்டில் பெல்ஜியம் நாட்டில் பிறந்தவர்.

         அறிவும் அழகும் நிறைந்த வால்டேட்ரூடிஸ்  நற்பண்பில் வளர்ந்து வந்தார். அவரை பலர் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். இவரது பெற்றோர் மடெல்கார் என்ற இளைஞரை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துவைத்தார்கள். வால்டேட்ரூடிஸ் தன் கணவருடன் சேர்ந்து ஏழை எளிய மக்களுக்கு உதவினார். நற்பண்பில் சிறந்து விளங்கினார். நான்கு பிள்ளைகளுக்கு தாயாக மாறினார். பிற்களை நற்பண்பிலும் தூய்மையிலும் வளர்த்தினார்.

         வால்டேட்ரூடிஸ் செய்து நற்பணிகளை விரும்பாத சிலர் அவர்மீது குற்றம் சுமத்தினர். அவரது கணவருரிடம் அவரை பற்றி தவறாக கூறினார்கள். பல துன்பங்களை சந்தித்தவேளையில் சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவிடம் அர்ப்பணம் செய்து வாழ்ந்தார். தனது கணவரின் அனுமதியுடன் தனது சொத்துகளை விற்று ஏழை மக்களுக்கு பகிர்ந்தார். கணவரின் அனுமதி பெற்று வாழ்வின் இறுதி காலக்கட்டத்தில் துறவு இல்லத்தில் வாழ்ந்தார். இறைவனை தஞ்சம் என்று வாழ்ந்த வால்டேட்ரூடிஸ் 688ஆம் ஆண்டு இறந்தார்.

No comments:

Post a Comment