Friday 13 April 2018

ஏப்ரல் 10 புனித ஃபுல்பெர்ட்

   
         இறைஞானத்தில் சிறந்து சிறந்த முறையில் கல்வி கற்றவர்.  தூய சிந்தனை உடையவர். துறவு வாழ்கையின்மீது அதிக ஆர்வம் கொண்டு வாழ்ந்தவரே புனித ஃபுல்பெர்ட். இவர் 952ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் பிறந்தவர். சிறுவயது முதல் அன்பிலும் அறிவிலும் பக்தியிலும் நற்பண்பிலும் சிறந்து விளங்கினார். தெளிந்த சிந்தனையுடன் தூய வாழ்க்கை வாழ் விரும்பி முயற்சி செய்தார். இறைவனின் முன்பாக அமர்ந்து செபிப்பதில் ஆனந்தம் அடைந்தார்.


         இறைநம்பிக்கையில் சிறந்து விளங்கிய ஃபுல்பெர்ட் குருவாக அருள்பொழிவு பெற்று இறைபணி செய்ய விரும்பினார். 1007ஆம் ஆயராக அருள்பொழிவு பெற்றார். கல்வி பணியும் புனித ஹிலாரி ஆலயத்தின கருவூலக்காப்பாளராக பணியாற்றினார். சமூக விரோதிகளால் துன்புறுத்தப்பட்டபோது இறைவனிடம் தஞ்சம் புகுந்தார். தன்னை துன்புறுத்திய மக்களுக்காக வேண்டுதல் செய்தார். அனைவரிடமும் அன்பும் பாசமும் கொண்டு துறவிகள், குருக்கள் மற்றும் இறைமக்களையும் வழி நடத்தினார். பாடல்கள் எழுதிய இறைவனை போற்றி புகழ்ந்த ஃபுல்பெர்ட் 1029ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் நாள் இறந்தார். 

No comments:

Post a Comment