Saturday 21 April 2018

ஏப்ரல் 19. புனித ஒன்பதாம் சிங்கராயர்

           
         கத்தோலிக்க விசுவாசத்தில் இறுதிவரை நிலைத்து நின்றவர். இறைவனின் கருணையை அளவில்லாமல் பெற்றவர். இவரது இயற்யெர் புருனோ என்பதாகும். கல்வி கற்பதில் சிறந்து விளங்கினார். பெற்றோரின் வழிகாட்டுதலால் இறைபக்தியில் சிறந்து விளங்கினார். தப்பறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவரே புனித ஒன்பதாம் சிங்கராயர். இவர் பிரான்ஸ் நாட்டில் எகிசிம் என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தை இரண்டாம் கான்ராடின் என்ற அரசரின் உதவியாளராக பணியாற்றினார்.


         சிங்கராயர் தனது ஐந்து வயது முதல் டோல் மறைமாவட்ட ஆயர் பெர்த்தோல்டு என்பரின் பாதுகாப்பில் வளர்ந்தார். ஆயரிடமிருந்து செபிக்க கற்றுக்கொண்டு இறைபக்தியில் வளர்ந்து வந்தார். பள்ளிப்பருவத்தில் விடுமுறைக்காக வீட்டிற்கு வரும் வழியில் விலங்குகளால் தாக்கப்பட்டு உயிருக்காக போராடினார். இத்தருணத்தில் சிலுவையில் தொங்கிய இயேசுவிடம் உருக்கமாக வேண்டுதல் செய்தார். சிங்கராயருக்கு பாடுகள் ஏற்ற இயேசு காட்சி கொடுத்து அவரை குணமாக்கினார்.


         சிங்கராயர் இறைவனின் அன்பும் அரவணைப்பும் பெற்று வளர்ந்தார். இறைவனுக்கு தன்னை அர்ப்பணம் செய்து குருவாக அருள்பொழிவு பெற்று இறையாட்சி பணியை ஆரம்பித்தார். 1027ஆம் ஆண்டு டோல் மறைமாவட்டத்தின் ஆயராக பெறுப்பு ஏற்று இறைமக்களை இறையாட்சி பாதையில் வழிநடத்தினார். திருச்சபையை அன்பு செய்தார். பஞ்சத்தில் துன்புற்ற மக்களுக்கு உதவி செய்தார். 1049ஆம் ஆண்டு திருத்தந்தையாக அருள்பொழிவு பெற்றார். திருச்சபையில் நிலவிய தப்பறைகளுக்கு எதிராக குரல் கொடுத்த சிங்கராயர்1054ஆம் ஆண்டு இறந்தார்.


No comments:

Post a Comment