Wednesday 4 April 2018

புனித ரிச்சர்ட்


         புனிதமான வாழ்வை விரும்பியவர். இறைவனின் துணையை நாடி அவரது நிழலில் வாழ்ந்தவர். இறைபாதத்தில் அமர்ந்து தனது அறிவை வளர்த்துக்கொண்டாவர். அன்னை மரியாவிடம் மிகுந்த அன்பும் ஆதரவும் பெற்று தூயவராக வாழ்ந்தார். துன்பத் துயரங்களில் இறைவனே தஞ்சம் என்று வாழ்ந்தவரே புனித ரிச்சர்ட். இவர் 1197ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ட்ரூய்ட்விச் என்னும் இடத்தில் பிறந்தவர். இளம்வயதில் தந்தையை இழந்தார். தாயின் வழிகாட்டுதலால் இறைபக்தியில் சிறந்து விளங்கினார். 

        தனது அறிவை வளர்த்துக்கொள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சென்று கல்வி கற்றார். வசதியான ஆடம்பரமான வாழ்க்வை வாழ்வதற்கான வாய்ப்புகள் பெற்றிருந்தாலும் எளிமையான வாழ்வை விரும்பி ஏழ்மையை பின்பற்றினார். கிறிஸ்துவின் எளிமையை பின்பற்றி வாழ்ந்தார். கிறிஸ்துவின் அன்பினால் ஆட்கொள்ளப்பட்டபோது தூயவராக வாழ்ந்தார். ரிச்சர்ட் தூய வாழ்க்கையை பார்த்த வின்கோன் ஆயர் ராபர்ட் இவரை தனது மறைமாவட்டத்தின் தலைமைச் செயலராக நியமணம் செய்தார். அனைவரிடமும் அன்புடன் தோழமை உணர்வுடன் பழகினார். ரிச்சர்ட் இறைவனோடு உறவுகொண்டு அவருக்காக வாழ விரும்பினார். ஓர்லியன்ஸ் இடத்திலுள்ள சாமிநாதர் துறவு மடத்தில் சேர்ந்து இறையியல் கற்று குருவாக அருள்பொழிவு பெற்று 1253ஆம் ஆண்டு இறந்தார். 

No comments:

Post a Comment