Friday 20 April 2018

ஏப்ரல் 17 புனித அனிசெத்தூஸ்

       இறைஞானத்தின் வல்லமையால் இறைமக்களுக்கு நல்வழிகாட்டியவர். இறைவனின் திருவுளத்திற்கேற்ப தாழ்ச்சியின் வழியில் பயணம் செய்து நற்பண்புகளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். புனிதர்களின் வாழ்க்கை முறைகளை ஆர்முடன் அறிந்துகொண்டு அவர்களை போல இறைவனை அன்பு செய்தவர். தன்னலமற்ற பணிகள் வழியாக இறைவனை மாட்சிமைப்படுத்தியவரே புனித அனிசெத்தூஸ்.


       அனிசெத்தூஸ் 155ஆம் வண்டு திருத்தந்தையாக அருள்பொழிவு பெற்றார். இவருடை ஆட்சி காலத்தில் திருச்சபை மக்கள் பல துன்பங்களுக்கு உள்ளாகினர். பிரச்சனைகளை தூய ஆவியின் வல்லமையால் சுலபமாக எதிர்கொண்டு தீர்வு கண்டார். புனிதர்கள் யோவான் மற்றும் பிலிப்பு ஆகியோரின் வழியில் இறைமக்களை வழிநடத்தினார். துன்பத்தில் இறைவன்மீது நம்பிக்கை கொண்டு வாழ கற்பித்தார்.


        அனிசெத்தூஸ் திருத்தந்தையாக இருந்தக் காலத்தில் புனிதர்களான பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் பாரம்பரியங்களைப் பின்பற்றி உயிர்ப்புப் பெருவிழா நிசான் மாதத்தின் 14ஆம் நாள் கொண்டாட நடைமுறைக்கு கொண்டு வந்தார். திருச்சபையை இறைவனின் விரும்பியபடி வழி நடத்தினார். மாற்குஸ் அவுரேலியுஸ் என்பவர் கிறிஸ்தவ மக்களை கிறிஸ்துவை மறுதலிக்க துன்புத்தினான். அனிசெத்தூஸ் கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்டு மறைசாட்சியாக 161ஆம் ஆண்டு இறந்தார்.

No comments:

Post a Comment