Friday 31 August 2018

புனித ரேமண்ட் தன்

 

    இயேசுவின் மீது அன்பும், பக்தியும் நேர்மையையும், தூய்மையும் கொண்டு வாழ்ந்தவர். அமைதியான வழிகளில் பயணம் செய்து அமைதிக்காக உழைத்தவர். ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டியவர். கிறிஸ்தவ மக்களுக்கு உதவி செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தவரே  புனித ரேமண்ட் தன்.   இயேசுவின் மீது அன்பும், பக்தியும் கொண்டு வளர்க்கப்பட்டார். அயலாரிடம் அன்பு காட்டுவதிலும் சிறந்தவராய் திகழ்ந்தார். குருவாக 1222 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார். பின் வாலென்சியா என்ற நாட்டிற்கு மறைபரப்பு பணி செய்தார்.  ஏறக்குறைய 140 கிறிஸ்துவர்கள் அடிமைகளாக பிடிக்கப்பட்டிருந்தனர். ரேமண்ட்தான் அம்மக்களை அடிமைத்தனத்தினின்று மீட்டார். அதன்பிறகு அவர் வட ஆப்ரிக்காவில் மறைப்பணியை செய்ய அனுப்பப்பட்டார். அங்கும் 250 பேர் அடிமைகளாக இருந்தவர்களை மீட்டார். மிகச் சிறந்த முறையில் மறைபரப்புப் பணியற்றிய இவரை, அந்நாட்டு மக்களால் சிறைபிடித்து வைக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்டார். சிறையில் இருக்கும்போது அவரின் உதடுகள் இரண்டையும் இழுத்து பிடித்து, உதடுகளின் நடுவே, துளைப்போட்டு, இரும்பு பூட்டைக்கொண்டு, இவரின் வாயை பூட்டினர். அவர் பல துன்பங்களை அனுபவித்து இறந்தார். 

No comments:

Post a Comment