Tuesday 7 August 2018

புனித கயத்தான்

     அன்னை மரியாவின் அருள்பெற்று கீழ்ப்படிதல் வழியாக இறைவனுக்கு உகந்தவராக வாழ்ந்தவர்.  இறைவேண்டலிலும் பிறருக்கு அன்புப்பணி ஆற்றுவதிலும் சிறந்தவர்.  இறக்கும்வரை இயேசுவுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்தர்.  அறிவிலும் ஞானத்திலும் வளர்ந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராக மாறியவரே புனித கயத்தான். இவர் 1480ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் பிறந்தார். இவரது பெற்றோர் இவரை அன்னை மரியாவிடம் அர்ப்பணம் செய்தார்கள். அன்னையின் அருள்பெற்ற கயத்தான் நாளும் நற்பண்பில் சிறந்து விளங்கினார். தான் ஓர் அரச குடும்பத்தில் பிறந்ததால், தன் பெற்றோரின் சொத்திலிருந்து பெற்ற பணத்தைக்கொண்டு, தான் பிறந்த ஊரான விச்சென்சாவில் ஒரு மருத்துவமனையை கட்டினார். தான் வாழ்வு முழுவதையுமே நோயாளிகளுக்காக அர்ப்பணித்தார்.



   தனது 24ஆம் வயதில் உள்நாட்டு மற்றும் திருச்சபை சார்ந்த சட்ட நூலை கற்றுக்கொண்டார். அறிவின், இறைஞானத்தில் வளர்ச்சி அடைந்த கயத்தான் திருதந்தை இரண்டாம் ஜøலியஸ் என்பவரின் ஆட்சிக்கு உதவி செய்தார். இறைபக்தியில் வளர்ந்த கயத்தான் குருவாக அருள்பொழிவு பெற்று இறையாட்சி பணியை திறம்பட செய்தார். இறைமக்களுக்கு அன்பையும், அறிவையும், பாசத்தையும், இறையாசிரையும் பகிர்ந்தளித்தார். பிள்ளைகளாலும், உறவினர்களாலும், கைவிடப்பட்ட நோயாளிகளை, இறுதிமூச்சுவரை பராமரிக்க 1524ஆம் ஆண்டு புதிய துறவற சபையை தொடங்கினார். வெனிஸ் நகரிலும், நேப்பிள்ஸ் நகரிலும் இச்சபையை பரவ செய்தார். இத்துறவற சபையினர் பிறருக்கு பணிசெய்வதின் வழியாக, இயேசுவை மக்களுக்கு அறிவித்து, அவரின் சாட்சிகளாயினர்தூய வாழ்க்கை வாழ்ந்து அனைவருக்கும் முன்மாதிரியாக செயல்பட்டார். தனது கடமைகளை சரிவரச் செய்தார். ஒழுக்கநெறியில் சிறந்து தியாக வாழ்க்கை வாழ்ந்த கயத்தான் 1547ஆம் ஆண்டு  இறந்தார்.

3 comments:

  1. விண்ணக வழிகாட்டி என்றழைக்கப்பட்ட புனிதர் யார்

    ReplyDelete
  2. செபமாலை வீரர் யார், கருணை தேவதை என்றழைக்கப் படுபவர் யார்

    ReplyDelete
  3. Good morning sister, I need some one please help me sister

    ReplyDelete