Thursday 9 August 2018

புனித தெரசா பெனடிக்டா

   அமைதி வேண்டலில் தனி ஆர்வம் காட்டிவர்.  நற்பண்பில் வளர்ந்து அனைவரின் நன்மதிப்பை பெற்றவர். இறைபக்தியில் சிறந்து விளங்கியவர். உண்மைக்காக வாழ்ந்து நீதியை நிலைநாட்டியவரே புனித தெரசா பெனடிக்டா. இவர் ஜெர்மனியில் ப்ரஸ்லோ என்னும் இடத்தில் 1891ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 12ஆம் நாள் பிறந்தார். குழந்தைப்பருவத்தில் தந்தையை இழந்தார்.  சிறுவயதிலிருந்தே ஆன்மீகக் காரியங்களில் ஈடுபட்டார். பல புனிதர்களின் வரலாற்றை ஆர்வமுடன் வாசித்து, அவர்களைப்போல வாழவேண்டுமென்று விரும்பினார். சிறந்த அறிவாளியாகவும் காணப்பட்டார். இவர் எட்மண்ட் ஹஸ்ரல் என்பவரின் தத்துவ நுண்ணறிவால் ஈர்க்கப்பட்டிருந்த வேளையில் ஒரு கத்தோலிக்கப் பேராசிரியரின் துணைவியாருக்குச் சில உதவிகள் புரிந்துவந்தார். தன் கணவரை நினைத்து, திருச்சிலுவையை நோக்கி கண்ணீர்விட்டு மன்றாடி செபித்தார். தொடர்ந்து செபித்த அப்பெண்ணினால் கிறிஸ்துவ மதத்திற்கு தானும் மாற வேண்டுமென்று தூண்டப்பட்டார். அப்பொழுது, கத்தோலிக்க விசுவாசத்தின் மீது ஈர்ப்பு ஏற்படத் தொடங்கியது.


   தாயின் வழிகாட்டுதலால் நற்பண்பில் வாளர்ந்தார். உண்மைக்காக வாழ்ந்து இறைவனை மாட்சிப்படுத்த விரும்பினார். இறைவன் தனது வாழ்வின் மையமாக மாறிட ஆவல் கொண்டார். கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டு திருமுழுக்குப் பெற்றார். சிலுவையில் அறையுண்ட இயேசுவையே தியானித்து சகித்து வாழ்ந்தார். புனித அவிலா தெரசா அவரின் சுயசரிதை ஆர்வமுடன் படித்தார்.  கிறிஸ்துவின் நிலைவாழ்வுதரும் வார்த்தைகளை தனதாக்கிட விழைந்தார். தியான வாழ்க்கையை விரும்பினார்.  “அளவற்ற அமைதியில் நான் கடவுளின் இல்லத்து நுழைவாயிலைக் கடக்கிறேன்” என்றுகூறி கார்மெல் துறவு மடத்தில் சேர்ந்தார். கார்மெல் சபை கன்னியர் அடை அணிந்து சிலுவையின் தெரசா பெனடிக்டா என்று பெயர் பெற்று பலமுறை ஹிட்லரால் துன்புறுத்தப்பட்டபோதும், தான் " ஓர் கிறித்தவள்" என்றே கூறினார். இதனால் ஹிட்லர் யூத குலத்திற்கு, மேலும் பல துன்பங்களைக் கொடுத்தான். அப்படி இருந்தபோதும் கூட இறைவனை இறுகப்பற்றிக்கொண்டு தொடர்ந்து செபித்தார். ஹிட்லரின் பிடியிலிருந்தபோதும்கூட உடனிருந்த மக்களிடையே போதித்தார். இதனால் ஹிட்லரால் பலமுறை கொடுமைப்படுத்தப்பட்டு உயிர் துறந்தார்.

No comments:

Post a Comment