Tuesday 14 August 2018

அன்னை மரியா, மாக்சிமிலியன் கோல்பே

    அன்னை மரியாளிடம் மிகுந்த பக்தியும், பற்றும் கொண்டவர். பிள்ளைக்குரிய அன்பும் உரிமையும் காட்டினார். ஒரு குழந்தை காலையில் எழுந்தவுடன் தாயின் முகத்தைத் தேடுவது போல் அன்றாடம் அன்னை மரியாவின் அருளையும் அரவணைப்பையும் ஆதரவையும் நாடினார். அன்னை மரியா அவருக்கு தோன்றி தனது கரங்களில் இரண்டு கிரீடங்கள் வைத்திருந்தார். ஒன்று வெள்ளை நிறம். மற்றொன்று சிவப்பு நிறமுடையது. அன்னை மரியாள் அவரை அன்புடன் உற்றுப் பார்த்து,“மகனே! இவ்விரண்டு கிரீடங்களில் உமக்கு எது வேண்டும்? வெள்ளை கிரீடத்தின் பொருள், நீ உன் வாழ்நாள் முழுவதும் தூய்மையில் நிலைத்திருப்பாய் என்பதைக் குறிக்கிறது. சிவப்பு கிரீடத்தின் பொருள், நீ ஒரு மறைசாட்சியாகக் கிறிஸ்துவுக்காக இறப்பாய் என்பதைக் குறிக்கிறது” என்றார். இதைக் கேட்ட கோல்பே, “அம்மா, எனக்கு இரண்டு கிரீடமும் தாருங்கள்” என்று கூறினார். இதைக் கேட்ட அன்னை மரியா அவரை தம் நெஞ்சோடு அரவணைத்து திடன் அளித்து தேற்றினார். 

No comments:

Post a Comment