Thursday 16 August 2018

புனித ஹங்கேரி ஸ்டீபன்

     கிறிஸ்துவின் மீது பக்தி கொண்டு வாழ்ந்தவர். இறைமக்கள் இறைபக்தியில் வளர்ந்திட அயராது உழைத்தவரே புனித ஹங்கேரி ஸ்டீபன். இவர் 975ஆம் ஆண்டு ஹங்கேரி நாட்டில் க்ரான் என்னும் இடத்தில் பிற்ந்தார். இவரது தந்தை மேயராக பணி செய்தவர். கிறிஸ்துவின்மீது பக்தி கொண்டு தனது பிள்ளைகளை கிறிஸ்த நெறிகளின்படி வழிநடத்தினார். பெற்றோரின் வழிகாட்டுதலால் இறையன்பிலும் பிறரன்பிலும் வளர்ந்து வந்தார். ஸ்டீபன் தனது 10ஆம் வயதில் தந்தையுடன் இணைந்து திருமுழுக்கு பெற்றார். திருமுழுக்கின் போது தனது பெயரை ஸ்டீபன் என்று மாற்றினார். 20ஆம் வயதில் ஜிசேலா என்ற பெண்ணை திருமணம் செய்தார். தந்தை இறந்த பின் மேயராக பணியாற்றினார். தனது ஆட்சிக்கு உட்பட்ட மக்கள் கிஸ்துரை மீட்பராக ஏற்றுக்கொள்ள அயராது உழைத்தார். நாடு முழுவதும் கிறிஸ்து மயமாக்கிட உழைத்தார். திருதந்தையின் அனுமதி பெற்று புதிய ஆலயங்கள் எழுப்பினார். எருசலேமில் துறவு இல்லம் கட்டினார். திருச்சபைக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். ஆலயம் இறைவன் தங்கும் இடம் எனவே அவற்றை பாதுகாத்து வந்தார். ஏழை மக்களுக்கு உதவினார். நற்கருணை மீதும், அன்னை மரியாவின் மீதும் பக்தி கொண்டு வாழ்ந்த ஹங்கேரி ஸ்டீபன் இறந்தார்.

No comments:

Post a Comment