Friday 17 August 2018

புனித ஹயசின்த்


  இறைபக்தியில் வளர்ந்து நற்செய்தியை வாழ்வாக்கி வாழ்ந்தவர். இறையன்பிற்கு தன்னை பலியாக அர்ப்பணம் செய்தவர். துறவு வாழ்வை தேர்ந்தெடுத்து தவமுயற்சிகள் செய்து தூயவராக வாழ்ந்தவரே புனித ஹயசின்த் என்பவர். இவர் போலந்து நாட்டில் சிலேசியா என்னும் இடத்தில் 1185ஆம் ஆண்டு பிறந்தார். கல்வி கற்று இறைஞானத்தில் வளர்ந்து வந்தார். சட்டம் பயின்று முனைவர் பட்டம் பெற்றார். புனித தோமினிக் துறவு இல்லத்தில் சேர்ந்நு துறவு வாழ்வை தொடங்கினார். நற்செய்தியை போதிக்கும் பணியில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்தினார். இறைவார்த்தையை போதிப்பவராக இல்லாமல் வாழ்ந்து காட்டினார். ஏழை மக்களுக்கு உதவிகள் செய்தார். புதுமை செய்யும் வரம் பெற்றிருந்த ஹயசின்த் இறைமக்களின் தேவைகளை நிறைவேற்றி மக்களுள் ஒருவராக வாழ்ந்த ஹயசின்த் 1257ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment