Friday 3 August 2018

புனித வால்தியோஃப்

   இறைமக்களின் ஆன்ம ஈடேற்றத்திற்காக ஆர்வமுடன் உழைத்தவர். இறைவனின் அன்பையும், கனிவையும், மன்னிப்பையும் தனதாக்கி நாளும் பகர்ந்தளித்தவரே புனித வால்தியோஃப். இவர் 1095ஆம் வண்டு பிறந்தவர். இவர் குழந்தை பருவம் முதல் இறையன்பில் வளர்ந்து வந்தார். இறைவனின் பாதம் அமர்ந்து செபிப்பதில் ஆர்வம் செலுத்தினார். தன்னால் இயன்ற உதவிகளை செய்தவதில் கருத்தாய் செயல்பட்டார். அரண்மனையில் வாழ்ந்தாலும் ஆடம்பரம் இல்லாமல் வாழ்ந்து இறைபக்தியில் வளர கவனம் செலுத்தினார். 1130ஆம் ஆண்டு அகுஸ்தினார் மடத்தில் சேர்ந்தார். செபம், தவம் செய்தார். பலருடைய ஆன்ம ஈடேற்றத்திற்காக தன்னை கையளித்து 1160ஆம் ஆண்டு இறந்தார்.

No comments:

Post a Comment