Tuesday 28 August 2018

கன்னி மரியா, புனித அகுஸ்தினார்

   அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டு வாழ்ந்தவர். அகுஸ்தினார், “ஒரு மனிதரின் உடலுள்ள உறுப்புகளெல்லாம் நாக்குகளாக மாறினும் மரியன்னையை அவருடைய தகைமைக்கு ஏற்றவாறு புகழ முடியாது” என்று கூறினார். இயேசுவின் பிறப்பு நிகழ்ச்சியினால் மரியாவின் கன்னித்தன்மை ஒருபோதும் குறைந்துவிடவில்லை.  புனித அகுஸ்தினார், “மரியா இயேசுவை ஈன்றெடுப்பதற்கு முன்னும்; ஈன்றெடுத்தப் போதும்; ஈன்றெடுத்தப் பின்னும் கன்னியாவே இருந்தார்”என்று கூறினார். மரியா என்றும் கன்னி என்பது நமது கத்தோலிக்க விசுவாசமாகும். மரியா கன்னிமையில் மரியா, இயேசுவை ஈன்றெடுத்ததைப் பற்றி புனித அகுஸ்தினார் “வியப்படையுங்கள்; ஏனெனில் ஒரு கன்னி கருவுற்றிருக்கிறார். மேலும் வியப்படையுங்கள். ஏனெனில் கன்னி ஒரு குழந்தையை ஈன்றுள்ளார். குழந்தை ஈன்ற பின்னும் கன்னியாகவே இருக்கின்றார். என்னே வியப்பு! என்னே புதுமை! புதுமையிலும் புதுமை”என்று கூறினார். 

No comments:

Post a Comment