Friday 3 August 2018

ஆகஸ்ட் 2. புனித பேதுரு ஜøலியன் ஐமார்ட்

    நற்கருணை ஆண்டவர்மீது பற்றும் பக்தியும் கொண்டு வாழ்ந்தவர். நற்கருணையின் திருத்தூதர் என்று அழைக்கப்படுபவர். ஏழை குடும்பத்தில் பிறந்து இறையன்பின் செல்வந்தராக வாழ்ந்தவர். இறைவார்த்தையை வாழ்வாக்கி புனித பாதையில் பயணம் செய்தவரே புனித பேதுரு ஜøலியன் ஐமார்ட். இவர் 1811ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் லா மூர் என்னும் இடத்தில் பிறந்தார். இறைபக்தியில் வளர்ந்து வந்த பேதுரு ஜøலியன் இறைவனின் அழைப்புக்கு குரல் கொடுத்து குருத்துவ வாழ்வை தேர்ந்தெடுத்தார். 1834ஆம் ஆண்டு க்ரேநோபில் மறைமாவட்டத்திற்கு குருவாக அருள்பொழிவு பெற்றார். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தியும் பற்றும் கொண்டு அன்னையின் அரவணைப்பும் அன்பும் பெற்று இறையாட்சி பணியை சிறப்பாக செய்தார். நற்கருணை முன்பாக தனது நேரத்தை செலவிடுவதில் மகிழ்ச்சி அடைந்தார். நற்கருணை ஆராதனை நடத்தி இறைமக்களுக்கு இறையசீர் பெற்றுக்கொடுத்தார். கத்தோலிக்க நம்பிக்கை கைவிட்டு வாழ்ந்த மக்களை மனம் மாற்றினார். தனது பங்கு மக்களிடம், “தினமும் திருப்பலி காணுங்கள். நாள் முழுவதும் அது உங்களுக்கு வெற்றியைப் கொடுக்கும். அதன் பயனாக உங்கள் அனைத்து செயல்களையும் சிறப்பாக செய்ய இயலும்” என்றுகூறி நற்கருணை ஆண்டவரை அன்பு செய்த பேதுரு ஜøலியன் ஐமார்ட் 1868ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment