ஏழைகளின் நலனுக்காக வாழ்ந்தவர். தன்னலம் இன்றி பெய்வருத்தம் பாராமல் இறையாட்சி பணி செய்தவர். இறைவனுக்காக ஆர்வமுடன் நற்செயல்கள் செய்தவரே புனித மரிய மக்கில்லப். இவர் ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் 1842ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 15ஆம் நாள் பிறந்தார். இறைபக்தியில் வளர்ந்து இறையாட்சி பணி செய்தார். ஏழைகளின் நல்வாழ்வுக்காகவும், குழந்தைகளின் கல்வி வளர்ச்சிகாகவும் உழைத்தார். ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று கல்வி பணி செய்தார். திருச்சபையை அன்பு செய்தார். தூய வளனாரின் திரு இதய சபையின் முதல் உறுப்பினர். அன்னை மரியாவை அன்பு செய்தார். அன்னையின் அருள் பெற்று தூயவராக வாழ்ந்த 1901ஆம் ஆண்டு இறந்தார்.
No comments:
Post a Comment