Wednesday 1 August 2018

புனித அல்போன்ஸ் லிகோரி அன்னை மரியா


  
  புனித அல்போன்ஸ் லிகோரி அன்னை மரியாவின் கரங்கள் வழியல்லாமல் நாம் ஒன்றையும் பெற முடியாது என்பதை உணர்ந்தார். தனது வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் அன்னையின் வழியாக இறையருளை பெற்றார். தனது வாழ்வில் சந்தித்தத் தடைகளை செபமாலை வழியாக வெற்றியின் படிக்கற்களாக மாற்றினார். ஆன்மீக வாழ்வில் இறையன்பின் உச்ச நிலைக்கு அடைந்தது செபமாலை வழியாகவே என்று கூறினார். வயதான நிலையில் ஒருமுறை சக்கர வண்டியில் வைத்து அவரை ஒரு சகோதரர் மடத்துக்கு வெளியே காற்றோட்டமான இடத்திற்கு தள்ளிக்கொண்டு வந்தார். அப்போது லிகோரி அந்த சகோதரனைப் பார்த்து, ‘இன்று நீ செபமாலை செபித்தாயா?’ என்று கேட்டார். அந்த சகோதரன், ‘எனக்கு ஞாபகமில்லை’ என்று கூறினார். உடனே அல்போன்ஸ் கோரி, ‘அப்படியென்றால் நாம் இப்பொழுது செபமாலை செபிப்போம்’ என்றார். அச்சகோதரன், ‘நீங்கள் களைப்பாகத்தானே இருக்கிறீர்கள், ஒருநாள் செபமாலை செபிக்கவில்லை என்றால் என்ன ஆகிவிடப்போகிறது?’ என்று பதில் கூறினார். அதற்கு லிகோரி, “ஒருநாள் செபமாலை செபிக்காவிட்டால் நான் என் முடிவில்லா மீட்பைப்பெ றத் தவறிவிடுவேனோ? என்று அஞ்சுகிறேன்” என்றார்.


   எல்லா சனிக்கிழமைகளிலும் அன்னை மரியாவை நினைவு கூரவும், தினமும் செபமாலை செய்ய குருக்களுக்கும், இறைமக்களுக்கும் அழைப்பு விடுத்தார். “நமது வாழ்வில் துன்பங்கள், சோதனைகள், வருத்தங்கள், ஏமாற்றங்கள், கவலைகள் பெருகும் போது அன்னை மரியாவின் உதவியை நாடவேண்டும். அன்னையின் நாமம் நமது உதடுகளைவிட்டு நீங்காதிருக்கட்டும். அன்னை மரியாவை பின்பற்றினால் மீட்பின் பாதையில் எளிதாக நடக்க இயலும். நம்பிக்கை இழக்கமாட்டோம்; சோர்வடைய மாட்டோம்; தீமைக்குப் பயப்பட வேண்டாம்; விண்ணக வாழ்வை பெற்றுக் கொள்வோம்” என்றார்.   “செபமாலை சொல்லும் ஒரு படையை எனக்கு கொடுங்கள்; நான் இவ்வுலகையே வென்றுக்  காட்டுகிறேன்” என்பதற்கேற்ப செபமாலையை கரங்களில் ஏந்தி தினமும் செபம் செய்தார். செபமாலையின் சக்தியால் தப்பறைகளை தோற்கடித்தார். 

No comments:

Post a Comment