Friday 10 August 2018

புனித லாரன்ஸ்

   இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டு வாழ்ந்தவர். திருச்சபையின் சொத்துக்களை பராமரித்தவர். கிறிஸ்துவுக்காகப் பணிசெய்து மறைசாட்சியாக மாறிட ஆவல் கொண்டவர். இறைவார்த்தையை வாழ்வாக்கி பறைசாற்றியவர். கிறிஸ்துவுக்காக துன்பங்களை துணிவுடன் ஏற்றுக்கொண்டு மறைசாட்சியாக மாறியவரே புனித லாரன்ஸ். இவர் உரோமைத் திருத்தொண்டர்களுள் ஒருவராக பணியாற்றியவர். இரண்டாம் திருத்தந்தை சிக்ஸ்துஸ் இவரது நண்பர். இவரது மறையுரையால் பலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். இரண்டாம் திருத்தந்தை சிக்ஸ்துஸ் கொலைக் களத்திற்கு இழுத்துச் செல்லப் படடபோது, “தூய குருவே உமது திருத்தொண்டர் இல்லாது நீர் மட்டும் செல்வதேன்” என்று லாரன்ஸ் கேட்டார். அதற்கு, “நீர் மூன்று நாட்களில் என்னை பின்செல்வாய்”  என்று திருத்தந்தை பதில் கூறினார்.  


  லாரன்ஸ் கிறிஸ்து அறிவித்தக் காரணத்தால் மக்ரியன் அரசன் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தான். திருச்சபையின் சொத்துக்களைத் தன்னிடம் ஒப்படைக்கக் கட்டளையிட்டான். லாரன்ஸ் மறுநாள் காலையில் நடக்க இயலாதவர், பார்வையற்றவர், முதியோர், ஆதரவற்றோர் போன்ற ஏழை எளிய மக்களை அரசன் முன்பாக நிறுத்தி, “இவர்களே திருச்சபையின் சொத்து” என்றார். இதைக்கேட்ட அரசன் கோபங்கொண்டு அவரை இரும்புக் கட்டில் படுக்கவைத்து அடியில் தீ மூட்ட கட்டளையிட்டான். நெருப்பின் தணல் வெந்து வேதனையால் துடித்தார். லாரன்ஸ் அரசனைப் பார்த்து “கொடுங்கோலா! என் உடன் இந்தப்பாகம் நன்றாக வெந்துவிட்டது. திருப்பிப்போடு, நன்றாக வெந்ததும் எடுத்து சாப்பிடு” என்றார். அவரது முகம் விண்ணக ஒளியால் சுடர்விட்டது. பார்த்தவர்கள் பரவசமடைந்து கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்டார்கள். லாரன்ஸ் ஆகஸ்ட் 10ஆம் நாள் மறைசாட்சியாக இறந்தார்.

No comments:

Post a Comment