Wednesday 7 July 2021

புனித பான்றேனஸ்


புனித பான்றேனஸ் இத்தாலியில் பிறந்தார். சாக்ரடீஸ் கொள்கையை பின்பற்றினார். கிறிஸ்தவர்களுடன் தொடர்பு கொண்டு கிறிஸ்துவையும் அவரது கோட்பாடுகளையும் நன்கு கற்றார். புனித மாற்குவின் சீடர்கள் நடத்தி வந்த மறைப்பள்ளியல் படித்து இறையறிவில் வளர்ந்து அப்பள்ளிக்கு தலைவரானர்.      இறைவாக்கினர்கள், திருத்தூதர்களின் போதனையை உள்வாங்கினார். 

      பான்றேனஸ் இறைவனுக்கு தன்னை அர்ப்பணித்து ஞானமும், அறிவுதிறனும் பெற்று தாழ்ச்சியுடன் வாழ்ந்தார். தனது வாழ்வை நெறிப்படுத்தி இறைவனுக்கு உகந்தவரானார். திருத்தூதர்களின் சிந்தனைகளை மக்களுக்கு போதித்தார். அமைதியின் கடவுளை சொந்தமாக்கி அமைதியில் வாழ்ந்தார். தன்னிடம் வந்தவர்களை இறையன்பால் இறைபிரசன்னத்தால் நிறைத்தார். நற்செய்தி இந்தயாவிலும் அறிவித்து எண்ணற்றோரை மனமாற்றினார். கிறிஸ்துவின் பாதத்தடங்களில் நடந்து ஓர் இறைவாக்கினராக இறைபணி செய்த பான்றேனஸ் 216ஆம் ஆண்டு இறந்தார்.                                                                                                         

No comments:

Post a Comment