Wednesday 14 July 2021

புனித கமில்லஸ் தே லெல்லிஸ்

 

   புனித கமில்லஸ் தே லெல்லிஸ் இத்தாலியில் 1550இல் பிறந்தார். இறைபக்தியில் வளர்ந்து முன்மதியோடு செயல்பட்டார். இளமையில் நெப்போலியன் போர்படையில் படைவீரரானார். படை முகாமில் சூதாட்டத்திற்கு அடிமையானார். போரின்போது 2 கால்களிலும் காயங்கள் ஏற்பட்டதால் போர்களத்திலிருந்து வெளியேறி உரோமையில் மருத்துவமனையில் பணியாற்றினார். 

    உழைப்பும் திறமையும் மிகுந்த கமில்லஸ் கப்புச்சன் சபை பொதுநிலை சகோதரர் பிரிவில் சேர்ந்தார். புனித பிலிப்பு நேரியின் வழிகாட்டுதல் பெற்று புனிதப்பாதையில் பயணித்தார். தனது 32ஆம் வயதில் இயேசு சபை கல்லூரியில் இலத்தின் பயின்று குருவானார். 1584ஆம் ஆண்டு நல்மரணத்தின் தந்தையர்கள் என்ற சபையை தோற்றுவித்து பிளேக் நோய் பாதிக்கப்பட்வர்களுக்கு பணி செய்தார். நோயளிகள்மீது கருசனை கொண்டு இறைவல்லமையால் புதுமைகள் செய்தார். துன்பங்களில் மரியாவிடம் சரண் அடைந்தார். சபையின் தலைவராக நற்செய்தி அறிவித்த கமில்லஸ் 1614, ஜøலை 14ஆம் நாள் இறந்தார்.                                

No comments:

Post a Comment