Saturday 31 July 2021

புனித லொயோலா இஞ்ஞாசியார்


   புனித இஞ்ஞாசியார் ஸ்பெயினில் 1491இல் டிசம்பர் 27ஆம் நாள் பிறந்தார். 15ஆம் வயதில் ஸ்பெயின் நாட்டு அரசவையில் போர் வீரரானார். 1521இல் பம்பலூனா கோட்டையைப் பிரெஞ்சுகாரரிடமிருந்து காப்பாற்றும் போரில் அவரது கால்கள் ஊனமுற்றன. ஓய்வு எடுத்தபோது விவிலியம், புனித பிரான்சிஸ் அசிசியார், புனித சாமிநாதார் சரிதை படித்து மனந்திரும்பினார். 

    1522இல் மார்ச் 25ஆம் நாள் அன்னை மரியா வழி இயேசுவுக்கு தன்னை அர்ப்பணித்தார். குருவாக அருள் பெற்று படித்தோருக்கும், பாமரருக்கும் நற்செய்தி போதித்தார். தவறிய பெண்களுக்கு வழிகாட்டி, நோயுற்றோரை நலமாக்கினார். ஒருநாள் 7 மணிநேரம் இறைவனோடிருந்தார். 1534இல் இறை இயேசுவின் சேவகர்கள் சபை தொடங்கினார். இதயத்தில் இயேசுவை சுமந்து அயலானின் மீட்புக்காகவும், இறைவனின் அதி உன்னத மகிமைக்காகவும் இறையாட்சி பணி செய்து 1556, ஜூலை 31ஆம் நாள் இறந்தார்.     

No comments:

Post a Comment