Monday 12 July 2021

புனித யோவான் கால்பர்ட்


  புனித யோவான் கால்பர்ட் 999இல் ஃபுளோரன்ஸ் நகரில் பிறந்தார். பெற்றோரின் வாழிகாட்டுதலால் கிறிஸ்துவ விசுவாசத்திலும், பக்தியிலும் வளர்ந்து இறையன்பையும், ஆசீரையும் சுவைத்தார். தனது சகோதரனை கொலை செய்தவனை கிறிஸ்துவின் பெயரால் மன்னித்தார். தன்னை துன்புறுத்தியவர்களை அன்பு செய்தார். இறைவல்லமையும், அன்பையும் உணர்ந்தபோது புனித ஆசிர்வாதப்பர் சபையில் சேர்ந்து செபம், தவம், ஒறுத்தல்கள் வழி புனிதமடைந்தார். 

   யோவான் கால்பர்ட்  ஆசிர்வாதப்பர் சபை ஒழுங்குகளையே பின்பற்றி வல்லம்ரோசா துறவு மடம் ஆரம்பித்தார். ஏழைகளின் தேவைகளை அக்கறையுடன் நிறைவேற்றினார். தன்னை நாடிவருவோரின் பசியை போக்கிட பொருள் வைப்பு அறையிலுள்ள பொருட்களை செபத்தின் வழியாக பெருக்கினார். நற்கருணை ஆண்டவரை தஞ்சமாகவும், அன்னை மரியாவை துணையாகவும் கொண்டிருந்த யோவான் 1073, ஜூலை 12ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment