Tuesday 20 July 2021

புனிதர்களான எலியாஸ், ஃபிளேவியன்

    புனிதர்களான எலியாஸ் மற்றும் ஃபிளேவியன் வீசுவாத்தின் வீரரார்கள். எலியாஸ் அரபு நாட்டில் பிறந்து துறவு மடத்தில் கல்வி கற்று விசுவாசத்தில் வளர்ந்தார். 457ஆம் ஆண்டு பாலஸ்தீனாவிற்கு சென்று யுத்திமுஸ் என்பவரின் உதவியில் வாழ்ந்தார். ஜெரிக்கோ என்ற குழுமத்தை நிறுவினார். குருத்துவம் வழி இறைவனின் திருவுளம் நிறைவேற்றினார். 494இல் எருசலேம் மறைத்தந்தையானார். அந்தியோக்கு மறைத்தந்தை ஃபிளேவியன் என்பவருடன் தோழமை உறவு கொண்டிருந்தார். இரண்டு மறைத்தந்தையர்களும் ஓரியல்பு கோட்பாடு எதிராக குரல் கொடுத்தனர். பேரரசர் முதலாம் அனஸ்தாசியுஸ் ஓரியல்பு கோட்பாட்டை ஆதரித்தார். பேரரசர், எலியாஸ் மற்றும் ஃபிளேவியன் இருவரையும் ஓரியல்பு கோட்பாட்டை ஏற்றுக்கொள்வதாகக்கூறி ஆவணத்தில் கையொப்பம் போட சொன்னார். மறுத்த எலியாஸ், ஃபிளேவியன் இருவரையும் 516ஆம் ஆண்டு அய்லா என்ற இடத்திற்கு நாடுகடத்தினார். செல்லும் வழியில் ஃபிளேவியன் இறந்தார். அய்லாவில் எலியாஸ் இறந்தார்.                                                         

No comments:

Post a Comment