Friday 9 July 2021

புனித எஸ்பேரியஸ், ஸோவே

    

   புனிதர்களான எஸ்பேரியஸ் மற்றும் ஸோவே இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவ தம்பதிகள். இவர்கள் இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர். பம்பிலியாவில் கிறிஸ்துவை அறியாத கட்டுலஸ் என்பவரின் வீட்டில் அடிமைகளாக வேலை செய்தனர். முதலாளி கட்டுலஸ்க்கு மகன் பிறந்ததும் அவர் வழிபடும் தெய்வ சிலைக்கு படையல் கொடுக்க ஏற்பாடு செய்தான். அந்நிகழ்வில் அப்பகுதி மக்கள் அனைவரும் பங்கேற்றனர். 

     எஸ்பேரியஸ் குடும்பம் பங்கேற்கவில்லை. முதலாளி ஸ்பேரியஸ் குடும்பத்தை அழைத்து கோபத்துடன் அவர் வணங்கும் தெய்வ சிலையை வணங்குமாறு சொன்னான். கிறிஸ்துவை அரசராக ஏற்ற ஸ்பேரியஸ், úஸôவே இருவரும் தலைவனின் கட்டளையைப் புறக்கணித்து என்றும் வாழும் கிறிஸ்துவை அரசராக அறிக்கையிட்டனர். கோபம் அடைந்த கட்டுலஸ், எஸ்பேரியஸ் அவரது மனைவி இரண்டு குழந்தைகளையும் கொன்று நெருப்பு சூளைக்கு தூக்கிப்போட்டனர். கிறிஸ்தவ விசுவாசத்திற்கு சான்றாக வாழ்ந்த எஸ்பேரியஸ் அவரது குடும்பமும் 127ஆம் ஆண்டு இறந்தனர்.


No comments:

Post a Comment