Monday 19 July 2021

🌷புனித அலெக்சியார்

    புனித அலெக்சியார் உரோமையில் 4ஆம் நூற்றாண்டில் பிறந்தார். வளனார் என்ற மெய்யடியாரிடம் கல்வியும், சாத்திரங்களையும், கலைகளையும் கற்றார். ஏழைகள்மீது தீராத பாசம் கொண்டு தனது செல்வங்களை அனைவருக்கும் வழங்கினார். பக்தியிலும், அறிவிலும் வளர்ந்து விண்ணக வாழ்வில் நாட்டம் கொண்டார். உலகைத் துறந்து கடவுளை தனதாக்கிட மண்ணாசை, பொருளாசை, உடலாசைகளை முற்றிலும் துறந்தார். 

  அலெக்சியார் இறைவா! நான் கற்பு நெறி தவறாமல் தரணியில் வாழ அருள்புரிவீர் என்றார். பெற்றோர் அவருக்கு திருமணம் செய்தனர். அலெக்ஸ் தவம் மேற்கொள்ள வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் புறப்பட்டார். எடேஸ்ஸôவில் 17ஆண்டுகள் கடுந்தவம் புரிந்து மக்களுக்கு நன்மைகள் செய்தார். அவரது பெயரும், புகழும் நாடெங்கும் பரவியபோது தவம் குலைந்துவிடும் என்று அஞ்சி தனது நாட்டில் யாருக்கும் தெரியாமல் தன் வீட்டில் தங்கி வீரர்களின் துன்புறுத்தலை ஏற்று இறந்தார். பெற்றோர் தனது மகன் அலெக்ஸ் என்று அறிந்ததும் துயருற்று அழுது  நல்லடக்கம் செய்தனர்.                  

No comments:

Post a Comment