Tuesday 13 July 2021

இயேசுவின் புனித தெரசாள் லாஸ் ஆன்டஸ்


    புனித தெரசாள் லாஸ் ஆன்டஸ் அமெரிக்காவில் 1900, ஜூலை13ஆம் நாள் பிறந்தார். பக்தியில் வளர்ந்து திருப்பலி வழி நற்கருணை ஆண்டவரை சொந்தமாக்கினார். அன்னை மரியாவை பாதுகாவலியாகவும், வழிகாட்டியாகவும், ஆசிரியையாகவும் தேர்ந்தெடுத்தார். நற்கருணை பெற்றநாள், “இயேசு கிறிஸ்துவின் அன்பு வலையில் நான் சிக்கிக்கொண்டேன்” என்றார். குழந்தை ஏசுவின் புனித தெரசாள் சரிதைப் படித்து 1919இல் கார்மெல் துறவு மடத்தில் சேர்ந்தார். 

    தெரசாள் லாஸ் ஆன்டஸ்  இறைபிரசன்னத்தில் நிலைத்திருந்து நோயாளிகள் நலம்பெற இறைவேண்டல் செய்தார். கிறிஸ்துவின் ஏழ்மையில் பங்குபெற ஏழ்மையாக வாழ்ந்தார். செபவாழ்வு, குருக்களுக்கு செபிப்பது, இறைவனை அன்பு செய்வது, இறைவார்த்தையை தியானிப்பது போன்ற விதிகளை பின்பற்றினார். “இறைவனோடு வாழ்வது மண்ணில் விண்ணமன்றோ. பிறருக்கு இரக்கமும், நமக்கு கண்டிப்பும் கொண்டிருப்போம்” என்றுகூறி 1920, ஏப்ரல் 12ஆம் நாள் இறந்தார்.                                                                                                                                          

No comments:

Post a Comment