Monday 5 July 2021

புனித அந்தோனி மரிய சக்கரியா

     

      புனித அந்தோனி மரிய சக்கரியா 1502ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்தார். தாயன்பிலும் இறைபக்தியிலும் வளர்ந்து கல்வி கற்றார். ஏழைகளிடத்தில் அன்பும் இரக்கம் கொண்டு உதவினார். தனது 22ஆம் வயதில் மருத்துவரானார். நம்பிக்கையும், இறைபற்றும் மிகுந்த அந்தோனி இறையில் கற்று 1528ஆம் ஆண்டு குருவானார். நோயாளிகளுக்கு மருத்துவம் செய்து ஆறுதல் கூறினார். சிறை கைதிகளுக்கு கிறிஸ்துவின் அன்பை பகர்ந்தார். 

     

        சக்கரியா மிலான் சென்றபோது மக்கள் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு துயருற்றவர்களுக்கு உதவினார். மக்களின் ஆடம்பர வாழ்வு, ஏற்றத்தாழ்வுகள், அரசியல் கொள்கைகள், லூத்தர் போதனையால் திருச்சபையில் பிளவுகள் ஏற்பட்ட நிலையை கண்டார். மக்களுக்கு உதவிட சக்கரியா 5 சகோதரர்களுடன் துறவு சபை நிறுவினார். இறைவார்த்தை, திருச்சபையின் விசுவாச உண்மைகளை போதித்தார். மக்கள் திருச்சிலுவை மீது அன்பு கொண்டு சிலுவையில் அடைக்கலம் தேடவும், நற்கருணை ஆராதனை செய்யவும் கற்பித்த சக்கரியா 1039ஆம் ஆண்டு இறந்தார்.

No comments:

Post a Comment