Monday 3 September 2018

புனித பெரிய கிரகோரி

   இரக்கத்தை அவர்கள் வழியாக தம் மக்கள் மீது பொழிகிறார். உங்கள் மீது பொழியப்படும் இந்த விண்ணக ஆசிர் உங்கள் மக்கள் மீது பொழியப்படும் என்று கூறியவர். கிறிஸ்தவ வழிபாடுகளின் தந்தை என்று அழைக்கப்படுபவர். கிறிஸ்துவை அறியாத மக்களுக்கு கிறிஸ்துவை அறிவிப்பதில் அளவில்லா ஆனந்தம் அடைந்தவரே புனித பெரிய கிரகோரி. இவர் 540ஆம் ஆண்டு உரோம் நகரில் பிறந்தார். செல்வமும் வசதியும் பெற்றிருந்தவேளையில் ஏழ்மையாக வாழ்ந்தார். கல்வி கற்று இறைஞானத்தில் சிறந்து விளங்கினார். துறவு வாழ்க்கையின் மீது ஆர்வம் கொண்டார். தனது 30 ஆம் வயதில் உரோம் நகரின் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடவுள் இவரை தம் பணிக்கு அழைப்பதை உணர்ந்த கிரகோரியார், அப்பதவியிலிருந்து விலகி புனித ஆசீர்வாதப்பர் சபையில் சேர்ந்தார். மிகுந்த பக்தியோடு பயிற்சிகளை பெற்று குருவானார். 590 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் நாள் பேதுருவின் அரியணைக்கு உயர்த்தப்பெற்றார். அப்பொறுப்பை ஏற்ற நாளிலிருந்து இடைவிடாமல் திருச்சபைக்காக உழைத்தார். எச்சூழலிலும் நேர்மையை கடைபிடித்து ஆட்சி செய்தார். தன்னால் இயன்றவரை ஏழை எளியவர்களுக்கு உதவினார். சிசிலி என்ற தீவில் பல துறவற மடங்களை தொடங்கி இறைப்பணியை வளர்த்தெடுத்தார்.தொண்டருக்கெல்லாம் தொண்டராக பணியாற்றிய கிரகோரியார் 604ஆம் மார்ச் 12ஆம் நாள் இநற்தார்.

No comments:

Post a Comment