Monday 3 September 2018

அன்னை மரியா

       புனித அல்போன்ஸ் மரிய  லிகோரி அன்னை மரியாவின் கரங்கள் வழியல்லாமல் நாம் ஒன்றையும் பெற முடியாது என்பதை உணர்ந்தார். தனது வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் அன்னையின் வழியாக இறையருளை பெற்றார். எல்லா சனிக்கிழமைகளிலும் அன்னை மரியாவை நினைவு கூரவும், தினமும் செபமாலை செய்ய குருக்களுக்கும், இறைமக்களுக்கும் அழைப்பு விடுத்தார். “நமது வாழ்வில் துன்பங்கள், சோதனைகள், வருத்தங்கள், ஏமாற்றங்கள், கவலைகள் பெருகும் போது அன்னை மரியாவின் உதவியை நாடவேண்டும். அன்னையின் நாமம் நமது உதடுகளைவிட்டு நீங்காதிருக்கட்டும். அன்னை மரியாவை பின்பற்றினால் மீட்பின் பாதையில் எளிதாக நடக்க இயலும். நம்பிக்கை இழக்கமாட்டோம்; சோர்வடைய மாட்டோம்; தீமைக்குப் பயப்பட வேண்டாம்; விண்ணக வாழ்வை பெற்றுக் கொள்வோம்” என்றார்.   “செபமாலை சொல்லும் ஒரு படையை எனக்கு கொடுங்கள்; நான் இவ்வுலகையே வென்றுக்  காட்டுகிறேன்” என்பதற்கேற்ப செபமாலையை கரங்களில் ஏந்தி தினமும் செபம் செய்தார். செபமாலையின் சக்தியால் தப்பறைகளை தோற்கடித்தார். 

No comments:

Post a Comment