Thursday 6 September 2018

புனித எலியத்தூரியஸ்

     இயேசுவின் ஏழ்மையின் பாதையில் பயணம் செய்தவர். உண்மை, அன்பு, நீதி இவற்றிற்கு சாட்சியாக வாழ்ந்தவர். மன்னிக்கும் மனநிலையுடன் தூயவராக வாழ்ந்தவரே புனித எலியத்தூரியஸ். இவர் குழந்தைப்பருவம் முதல் இறையன்பிலும் பிறரன்பிலும் வளர்ந்து வந்தார். மனசாட்சியின் குரலுக்கு செவிகொடுத்து வாழ்ந்தார். தூய ஆவியாரிடம் மிகுந்த பக்தி கொண்டு அவரது துணை நாடினார். துறவு வாழ்க்கை வாழ ஆவல்கொண்டு புனித மாற்கு துறவு இல்லத்தில் சேர்ந்து தவமுயற்சிகள் செய்து இறைவனை மாட்சிப்படுத்தினார். மக்களின் தேவைகள் அறிந்து செயல்பட்டார். தீய ஆவியல் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனை நோன்பிருந்து, தவமுயற்சிகள் வழியாக குணப்படுத்தினார். திருதந்தைக்காக தினமும் தியாகம் செய்து செபம் செய்தார். கிறிஸ்துவின் பாதையில் பாதங்கள் பதராமல் தூயவராக பயணம் செய்த எலித்தூரியஸ் 585ஆம் ஆண்டு இறந்தார்.

No comments:

Post a Comment