Saturday 29 September 2018

புனித கபிரியேல்: புனித இரபேல்



    இவரின் பெயருக்கு எபிரேய மொழியில் "கடவுளின் ஆற்றல் அல்லது கடவுளின் செய்தி" என்பது பொருள். கடவுளின் முக்கிய அதிதூதர்கள் ஏழுபேரில் இவரும் ஒருவர். மரியன்னைக்கு மங்களவார்த்தையின் வழியாக இறைமகன் இயேசுவின் பிறப்பை முன்னறிவித்தவர். திருமுழுக்கு யோவானின் பிறப்பை, சக்கரியாசுக்கு முன்னறிவித்தவரும் இவர்தான். தனித்தீர்வையின்போது, இறைவனின் முன்னிலையில் நிற்பவர் இவர். இறைவனால் தேர்ந்தெடுக்கப்படும், அவரின் மக்களின் நெற்றியில் ஆசீர் அளிப்பவரும் இவர். இயேசுவின் பிறப்பை, பெத்லேகேமில் இடையர்களுக்கு அறிவித்தவர். இஸ்லாமியர்கள் இவரை தேவதூதர்களின் தலைவர்களாகக் கருதுகின்றனர். இவர் தாழ்ச்சியையும், ஆறுதலையும் இறைவனிடமிருந்து பெற்று மக்களுக்கு தருகின்றார். இவர், பெர்சியா என்ற நாட்டிற்கு நிகழவிருந்த வீழ்ச்சியையும், வெற்றியையும் முன்னறிவித்தார். இவர் மரியன்னையிடம் கூறிய வாழ்த்துச் செய்தியை இன்று திருச்சபை மூவேளை செபமாக செபிக்கப்படுகின்றது. 



புனித இரபேல் 

   
        எபிரேய மொழியில் கூறப்படும் இவரின் பெயரின் பொருள் "கடவுள் குணமளிக்கின்றார்" என்பது. இவரும் இறைவனின் முக்கிய தூதர்கல் எழுவரில் ஒருவர். இவர் கடவுளிடம் பரிந்துப்பேசி குணமளிக்கிறவராக இருக்கின்றார். நீண்ட பயணங்களிலும் பாதுகாப்பான பயணத்தை கொடுக்கின்றார் 

No comments:

Post a Comment