Monday 10 September 2018

புனித நிக்கோலாஸ் டொலென்டினோ

     வானதூதரின் துயை பெற்று அறிவிலும் ஞானத்திலும் சிறந்து வளங்கியர். இயேசுவின் ஏழ்மையின் பாதையில் பயணம் நோன்பிருந்து ஒறுத்தல் வழியாக இறைவனை மாட்சிமைப்படுத்தியவரே புனித நிக்கோலாஸ் டொலென்டினோ. இவர் இத்தாலி நாட்டில் பிறந்து உண்மை, அன்பு, நீதி போன்ற நற்பண்புகளில் வளர்ந்து இறைபக்தியை சொந்தமாக்கினார். இவரது தாய் புனித நிக்கோலாஸ் திருத்தலம் சென்று வேண்டுதல் செய்ததன் பயனாக இவர் பிறந்த காரணத்தால் இவரது பெற்றோர் இவருக்கு நிக்கோலாஸ் என்று பெயர் சூட்டினார்கள். வானதூதரை அடிக்கடி காட்சியில் கண்டார். இறைபக்தியில் சிறந்து விளங்கினார். அன்னை மரியாவிடம் பக்தியும், பற்றும் கொண்டு புண்ணிய வாழ்வில் சிறந்து வளங்கினார். துறவு வாழ்வுக்கு தன்னை அர்ப்பணம் செய்து 1654ஆம் செப்டம்பர் திங்கள்9ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment