Wednesday 5 September 2018

செப். 4 புனித ரோஸ் விற்றர்போ

   இயேசுவின் நிலைவாழ்வுதரும் வார்த்தைகளுக்கு முற்றிலும் கீழ்ப்படித்நவர். இயேசுவின் துன்பப்பாடுகளில் பங்குசேர்ந்தவர். கிறிஸ்துவின் அன்பிற்கு தன்னை அர்ப்பணம் செய்து வாழ்ந்தவரே புனித ரோஸ் விற்றர்போ. இவர் இத்தாலி நாட்டில் விற்றர்போ என்னும் இடத்தில் 1235ஆம் ஆண்டு பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் இறைபக்தியில் வளர்ந்து இறையன்பின் செல்வந்தராக வாழ்ந்தார். துயவராக வாழ்ந்த ரோஸ் புதுமைகள் செய்யும் வரம் பெற்றிருந்தார். குழந்தைப்பருவம் முதல் தவ முயற்ச்சிக்ள் மேற்கெண்டு வாழ்ந்தார். அன்னை மரியாவிடம் அளவு கடந்த பக்தியும் அன்பு கொண்டார். வாழ்வில் துன்பங்கள் துயரங்கள் வருத்தங்கள் ஏழமாற்றங்கள் குழப்பங்கள் சந்தித்தபோது அன்னையின் துணை நாடி அருள்பெற்று துன்பங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றார். அன்னையின் வழிகாட்டுதலால் பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையில் சேர்ந்து உத்தம துறவியாக வாழ்ந்தார். ஜெர்மனி அரசர் இரண்டாம் ஃபிரடெரிக் திருத்தந்தைக்கு எதிராக செயல்பட்டார். இத்தருணத்தில் உண்மை எதுவென்று நகர்வீதிகளில் சென்று போதித்தார். “இயேசு எனது பாவங்களுக்காக அடிப்படார் எனில் அவருக்காக அடிபட நானும் தயராக இருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்று ஆண்டவர் எனக்கு உணர்த்துகிறாரோ அதையே செய்கிறேன்” என்றுகூறி 1250ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment