Monday 3 September 2018

01.9.18 புனித ஜைல்ஸ்

     மண்ணக வாழ்வில் இறைவனுக்கு உகந்தவராக தூய்மையான வாழ்க்கை வாழ்ந்தவர். தனிமையில் இறைவனோடு இருப்பதில் அளவில்லா ஆனந்தம் அடைந்தவர். இயற்கையை அன்பு செய்தார். தூய ஆவியின் அருள்பெற்று இறையாட்சி பணி செய்தவர். இறைவனுக்கு தனது உடல், பொருள் அனைத்தையும் அர்ப்பணம் செய்து ஆண்டவரின் அடிமையாக வாழ்ந்தவரே புனித ஜைல்ஸ். இவர் கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரில் 650ஆம் ஆண்டு பிறந்தார். கிறிஸ்துவுக்கு தன்னை அர்ப்பணம் செய்து தூயவராக வாழ்ந்து மக்களுக்கு நன்மைகள் செய்தார். துறவு மடம் அமைத்து தனிமையில் வாழ்ந்தார். கிறிஸ்துவை அளவில்லாமல் அன்பு செய்து நன்மைகைள் செய்த ஜைல்ஸ் 710ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 1ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment