Sunday 30 September 2018

புனித ஜெரோம்

 
 புனித ஜெரோம், “செபித்து, பின் விவிலியத்தை படிக்கத் தொடங்கு. அதைப் படித்த பின் செபி. விவிலியத்தை அறியாதவன் கிறிஸ்துவை அறிவதில்லை. எப்பொழுதும் வேலை செய்துகொண்டே இரு. கடவுள் வந்து பார்த்தாலும், அலகை சோதிக்க வந்தாலும் நீ சுறுசுறுப்புடன் இருப்பதை காணவேண்டும்”என்று கூறியவர்.


  கி.பி. 342ஆம் ஆண்டு டால்மேஷியாவில் பிறந்தார். இவரது இயற்பெயர் எரோணிமூஸ். லத்தின், கிரேக்கம், எபிரேயம் போன்ற மொழிகளில் புலமைப் பெற்றார். தனது 39ஆம் வயதில் குருவாக அருள்பொழிவு பெற்று இறையாட்சி பணியை ஆரம்பித்தார்.  இவரது தாராக மந்திரம், “விவிலியத்தை அறியாதவன் கிறிஸ்துவை அறியாதவன்” என்பதாகும்.  

 

  தூய ஆவியன் தூண்டுதலால் வானதூதரின் வழிகாட்டுதலால். விவிலியத்தை லத்தினில் மொழிபெயர்த்தார். இந்த மொழி பெயர்ப்பு வுல்கத்தா என்று அழைக்கப்படுகிறது. அதாவது சாதரணமாக பயன்படுத்துவது. அல்லது எளிமையானது என்பது பொருள். 

 

ஜெரோம், 420ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் நாள் மண்ணக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து, விண்ணக வாழ்வில் நுழைந்தார். புனித ஜெரோம் விவிலிய அறிஞர்கள், நூலகங்கள், நூலகப் பணியாளர்கள், பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகள், மாணவர்கள் ஆகியோரின் பாதுகாவலராக விளங்குகிறார்.

No comments:

Post a Comment