மருத்துவ தொல் வழியாக ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்தவர். கிறிஸ்துவின் அன்பினால் ஆட்கொள்ளப்பட்ட போது இறைவன் இறையாட்சி பணிக்காக அழைப்பதை உணர்ந்தார். இறைவனின் அழைப்பு ஏற்றுக்கொண்டவரே புனித யோவான் லெயோனார்ட். இவர் இத்தாலி நாட்டில் டயசிமோ என்னும் இடத்தில் 1541ஆம் ஆண்டு பிறந்தார்.
சமூகத்தில் ஏழை எளிய மக்கள் மிது கரிசணை கொண்டு வாழ்ந்தார். தனது 31ஆம் வயதில் குருவாக அருள்பொழிவு பெற்று கிறிஸ்துவின் வழிகளில் நடந்தார். ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய பொதுநிலையினரை ஒருங்கிணைத்து வழி காட்டினார். மருத்துவ மனைகளுக்கு சென்று நோயாளிகளை கவனித்துக்கொண்டார். சிறைப்பட்டாரை சந்தித்து நல் வழிகாட்டி அறிவுரை வழங்கினார். ஒப்புரவும் கொடுத்து கிறிஸ்துவின் அன்னை இரக்கத்தை பகர்ந்து கொடுத்தார். தேவையில் உள்ள மக்களுக்கு ஆன்மீகம் மற்றும் பொருள் உதவியும் செய்து கொடுத்தார்.
1574ஆம் ஆண்டு மறைமாவட்ட குருக்குக்கென மரியன்னை பெயரில் சபை தொடங்கினார். பொதுநிலையினர் ஏராளமானோர் இச்சபையில் இணைந்தனர். நற்கருணை பக்தியை பரப்பினார். அன்னை மரியாவின் மீது பக்தி கொண்டு மக்களுக்கு அன்னை மரியாவிடம் செபமாலை செபிக்கவும், மரிய பக்தியில் வளரவும் மக்களுக்கு நல்வழி காட்டினார். குழந்தைகளுக்கு நல்வழிகாட்டினார். நற்செய்தி ஆவலுடன் அறிவித்தார். ஒவ்வொரு மக்களுக் இறைவனை தேட வேண்டும். தேடலின் வழியாக இறையருள் பெற்று வளமுடன் வாழ வழிகாட்டினார். 1609 பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
Good Job...Sister.
ReplyDeleteI need April 29th Saint Details...