Tuesday 31 October 2017

விண்ணேற்பு அன்னை

அன்னை மரியா நம் அனைவருக்கும் விண்ணகத்தின் முன்சுவையைத் தருகின்றவராக இருக்கின்றார். “அமல உற்பவியும், கடவுளின் தாயும், என்றும் கன்னியுமான மரியாள், இவ்வுலக வாழ்க்கைப் பயணத்தை முடித்துவிட்டு, உடலோடும், ஆன்மாவோடும் விண்ணிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்”. இதைத் திருத்தந்தை பன்னிரெண்டாம் பத்திநாதர் 1950இல் விசுவாசப் பிரகடனம் செய்தார். மரியாவின் விண்ணேற்றத்தின் போது, மரியாவின் பெயரை வானதூதர்கள் மும்முறை, “பாலை நிலத்திருந்து புகைத்தூண்போல் எழுந்து நறுமணம் கமழ வருவது யாரோ?. மீண்டும் விடிவேளை வானம்போல் எட்டிப்பார்க்கும் அவள் யாரோ?” என்று வியந்து போற்றினர். (காண்.இபா3:6). இனிமை மிகுபாடல் காணப்படும் நாயகி, தம் திருமகனுடன் வெற்றி வாகைசூடி, விண்ணக மணவாட்டியாய், உயர்த்தப்பட்ட மரியாவின் உருவகமாகக் காணப்படுகிறார்.

                  அன்னை மரியா இன்றும் அருள்வரங்களையும், அருளையும் இயேசுவிடமிருந்து நமக்குப் பெற்றுத்தருகிறார். இனிமையான மரியின் நாமத்தை உச்சரிப்போம். காரணம், “மாமரியினுடைய பெயர் கடவுளின் தெய்வீகக் கருவூலத்திருந்து வந்தது” என்கிறார் புனித பீட்டர் டேமியன். மாமரியின் நாமம் சகல இனிமையும், தெய்வீக நறுமணமும் நிறைந்துள்ளது. இதைப்பற்றி பிராங்கோன் என்ற மடாதிபதி, “இறைமகன் இயேசுவின் நாமத்திற்கு அடுத்தாக, விண்ணிலோ, மண்ணிலோ, மாமரியின் நாமத்தைப் போல் வேறெந்த நாமமும் கிடையாது. அந்நாமத்திருந்து பக்தியுள்ள நெஞ்சங்கள் எவ்வளவோ அருட்கொடைகளையும், நம்பிக்கையையும், இனிமையையும், புனிதத்தையும் நிறைவாகப் பெறுகின்றன” என்கிறார். 

No comments:

Post a Comment