Thursday 26 October 2017

புனித தார்சிசியுஸ்

             தார்சிசியுஸ்  தார்சிசியுஸ் ஆண்டவரின் உடலை காக்க, அவமதிப்போரிடம் தருவதை விட சாவதே மேல்  என்று கூறியவர். இவர்   உரோமையில் மூன்றாம் நூற்றாண்டில் பிறந்தார். இத்தருணத்தில் உரோமை பேரரசர் டயோக்ளியஸின் கிறிஸ்தவ மக்களை மிகக்கொடூரமான முறையில் துன்புறுத்தினான். டயோக்ளியாசுக்கு அஞ்சி குகைகளிலும், சுரங்கங்களிலும் ஒளிவீசும் தீபங்களாக வாழ்ந்த கிறிஸ்தவ மக்களுக்கு தார்சிசியுஸ் நற்கருணை கொண்டு கொடுப்பது வழக்கம். இவர் கிறிஸ்துவின் நற்செய்தியை மையப்படுத்தி புனிதமான வாழ்க்கை வாழ்ந்தார். 


        ஓய்வு நேரங்களில் கிறிஸ்தவ முதியோர்களிடம் சென்று மறைச்சாட்சிகளைப் பற்றி கேட்டு தெரிந்துக்கொண்டார். கிறிஸ்துவின்மீதும், நற்கருணையின்மீதும், அன்னை மரியாவின்மீதும் அளவு கடந்து அன்பும் பக்தியும் கொண்டிருந்தார். தார்சிசியுஸ் வாழ்ந்த தருணத்தில் வேதவிரோதிகளின் ஆதிக்கம் அதிகரித்தன. ஆங்காங்கே கிறிஸ்தவர்கள் காரணமின்றி துன்புறுத்தப்பட்டு, கைது செய்து சிறையில் அடைத்தனர். கிறிஸ்தவ மக்கள் மறைவாக நற்கருணை வழிபாடு நடத்தினர். சிறையில் வாழ்கின்ற கிறிஸ்தவ மக்கள் இறக்கும் முன்பாக நற்கருணை வழங்குவது வழக்கம். தார்சிசியுஸ் மறைமுகமாக நடைப்பெற்ற நற்கருணை வழிபாட்டில் கலந்துக்கொண்டார். 

        12வயது நிரம்பிய தார்சிசியுஸ் சிறையில் துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு நற்கருணையை எடுத்து சென்றார். தார்சிசியுஸ் நற்கருணையுடன் நடந்து சென்றபோது, சிறைகாவலரின் கையில் சிக்கினார். இக்காரணத்தால் அவரை தடியால் அடித்தார்கள். தலையில் ஏற்பட்ட காயத்தால் சுயநினைவு இழந்து கீழேவிழுந்தார். நற்கருணையில் கிறிஸ்துவின் பிரசன்னத்தை உணர்ந்தார். ஆண்டவரின் திருவுடலை சுமந்து சென்ற தார்சிசியுஸ் ஆண்டவரின் உடலை காக்க, அவமதிப்போரிடம் தருவதை விட சாவதே மேல் என்று கருதி ஆகஸ்ட் 15ஆம் நாள் மறைச்சாட்சியாக இறந்தார். 
 

No comments:

Post a Comment