Friday 27 October 2017

புனித ஃப்ருமென்சியஸ்


கிறிஸ்தவ மக்களிடம், “அச்சமின்றி தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று வெளிக்காட்டுங்கள். உங்கள் வாழ்க்கை முறையால் சான்று பகிருங்கள்” என்று கூறியவர். தனது சொல்லாலும், செயலாலும் எண்ணற்ற மக்களுக்கு கிறிஸ்துவை அறிவித்தவர். திருச்சபையின் வளர்ச்சிக்காகவும், இறையாட்சி பணிக்காகவும் தனது பெரும் செல்வத்தை பயன்படுத்தியவரே புனித ஃப்ருமென்சியஸ். கிரேக்க வகுப்பை சேர்ந்த இவர் டயர் பகுதியில் நான்கமாம் நூற்றாண்டில்  பிறந்தார்.

     
         ஃப்ருமென்சியஸ் சிறுவனாக இருந்த தருணத்தில் தனது மாமவுடன் எத்தோப்பியாவுக்கு கப்பலில் பயணம் செய்தார். கப்பல் செங்கடல் பகுதியிக்கு அருகில் நின்றது. கொள்ளையர்கள் கப்பலில் பயணம் செய்த மக்களை வாளுக்கு இரையாக்கினர். ஃப்ருமென்சியஸ் மற்றும் அவரது தம்பியையும் கொலை செய்யாமல் அக்சும் அரசன் இஸனா என்பவரிடம் ஒப்படைத்தனர். தனது அன்பிலும், அறிவிலும் சிறந்து அரசரின் மனம் கவர்ந்தார். அரசனின் மகனுக்கு கல்வி கற்பிக்கும் பொறுப்பு இவருக்கு கொடுக்கப்பட்டது. இவரின் இறைஞானமும் கடவுள் பக்தியும் இவரை அரசனின் ஆலோசகராக மாறியது.           

          

        அரண்மணையில் வாழ்ந்தாலும் ஆடம்பரத்தை அகற்றி ஏழ்மையில் இறையன்பின் ஒளியாக வாழ்ந்தார். எத்தோப்பியாவில் இறைவார்த்தை விதைப்பதற்கான நிலம் தயாராக இருப்பதை உணர்ந்துகொண்டார். அன்பின் பாதையில் அப்பகுதி மக்களுக்கு கிறிஸ்தவ நெறிகளை கற்பித்தார். இயேசு கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்டு அறிக்கையிட தயங்கிய மக்களிடம் அச்சமின்றி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அறிக்கையிட கூறினார். இவரது போதனையால் அப்பகுதியில் கிறிஸ்தவம் வளரத்தொடங்கியது.
 

      ஃப்ருமென்சியஸ் மீண்டும் தனது தாய் நாடான டயர் பகுதிக்கு வந்தார். அலெக்ஸôந்திரிய பேராயர் அத்தனாசியாரை சந்தித்து எத்தோப்பியா நற்செய்தி விதைக்க தகுந்த நிலம் என்று கூறினார். அத்தனாசியார், ஃப்ருமென்சியûஸ ஆயராக அருள்பொழிவு செய்தார். ஃப்ருமென்சியஸ், “நான் இறைப்பணியாளராகப் பணியாற்ற விரும்புகிறேன்” என்றுகூறி, தன்னுடன் குருக்களையும், துறவிகளையும் அழைத்து எத்தோப்பியா சென்று இறைப்பணியை ஆரம்பித்தார். மக்களை கிறிஸ்துவின் உண்மை சீடராக மாற்றினர். “கீழ்ப்படிதல் மற்றும் ஒழுக்கமான வாழ்க்கை முறையால் கிறிஸ்துவை நெருங்கலாம்” என்று கற்பித்தார். அரசன் இஸôனாவும் மனம்மாறி கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டான். அவ்வாறு எத்தோப்பியாவில் கிறிஸ்தவம் வளரத்தொடங்கியது.  ஃப்ருமென்சியஸ் மண்ணக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து  383ஆம் ஆண்டு விண்ணக வாழ்வில் நுழைந்தார். அரசன், “எங்களுக்கு கிறிஸ்துவின் ஒளியை வெளிப்படுத்தியவர்” என்று கூறினார்.



   

No comments:

Post a Comment