Friday 29 June 2018

புனித பேதுரு

   
   
   இயேசு கிறிஸ்துவுக்காக தனது வாழ்வை அர்ப்பணம் செய்தவர். கிறிஸ்துவின் அன்பிற்கு அடிமையானவர். திருச்சபையின் நெடுந்தூணாக செயல்பட்டவர். மெசிய அனுபம் பெற்று இறைமக்களுக்கு போதித்தவர். கிறிஸ்துவினால் ஆட்கொள்ளப்பட்டபோது தனது உடமைகள் துறந்து கிறிஸ்துவை பின்சென்றவரே புனித பேதுரு
. இவர் பெத்சாய்தா நகரில் பிறந்து கப்பர்நகூமில் குடியேறிய யோனா என்பவரின் மகன். இயேசுவை முதல் முறையாக கண்டபோது இயேசு அவரிடம்  “உன் பெயர் சீமோன்” என்று இயேசு கூறியதைக் கேட்டு மகிழ்ந்தார்.

      இயேசுவின் அழைப்புக்கு தன்னை முழுமையாக அர்ப்பணம் செய்தார். கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு பின்  தூய ஆவியைப் பெற்றப் பின் முதல் போதனையில் மூவாயிரக்கணக்கான மக்களுக்கு திருமுழுக்கு கொடுத்தார். ஜெருசலேமில் பணியாற்றினார். இயேசு கிறிஸ்துவை அறிவித்த காரணத்திற்காக ஏரோது அக்கிரிப்பாவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கிறிஸ்துவின் பொருட்டு துன்பங்களை துணிவுடன் ஏற்றுக்கொண்டார். 253ஆம் ஆண்டு சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டார்.  

No comments:

Post a Comment